×
 

இளம் பெண்களை குறிவைத்து சீரழித்த சைக்கோ.. ஜப்பானை அலறவிட்ட டிவிட்டர் கில்லர் சிக்கியது எப்படி?

ஜப்பானில் 8 பெண்கள், ஒரு ஆண் உட்பட 9 பேரை கொன்று அவர்களது உடல்களை துண்டு துண்டாக வெட்டி வீசிய சைக்கோ கொலைகாரன் தகாஹிரோ ஷிரைஷிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டில் தொடர் மன உளைச்சல் காரணமாக தான் சாக விரும்புவதாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அவ்வாறு பதிவிட்ட வெகுசில நாளிலேயே அந்த பெண் மாயமானார். போலீசாரிடம் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் புகார் அளித்தனர்.

ஆரம்பத்தில் அந்த பெண் மன உளைச்சல் காரணமாக தலைமறைவாகி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நகர்ந்தது. பின்னர் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனவும் அஞ்சப்பட்டது.

இவை அனைத்தும் அந்த பெண்ணின் சமூக வலைதள கணக்குகளை பார்க்கும் வரை தான். அதன்பின்தான் இந்த வழக்கு பல திருப்பங்களை சந்தித்தது. அந்த இளம் பெண் சாக விரும்புவதாக பதிவிட்டுருந்த அந்த பதிவில் ஒரு இளைஞன் ஆறுதலாக பதிவிட்டு இருந்தான். ஆரம்பத்தில் அனைவரையும் போல்தான் இவனும் என நினைத்த போலீசார், அவனது உரையாடல்களை கண்காணித்த பிறகு விஷயம் விபரீதம் ஆவதை உணர்ந்தனர்.

இதையும் படிங்க: கடமையை செய்ய தவறிவிட்டது திமுக அரசு.. வசைபாடிய ஓ.பி.எஸ்..!

ஆம்.. அதில் சாக விரும்பியதாய் பதிவிட்டிருந்த பெண்ணை, அது கோழைத்தனம். வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று உற்சாக படுத்தாமல், நீங்கள் சாக நான் உதவி செய்கிறேன். எளிதாக மரணம் அடையாளம் என்கிற ரீதியில் அந்த உரையாடல் இருந்துள்ளது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவனது ஷோஷியல் மீடியா அக்கவுண்ட் மூலம் அவனது இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர்.

அங்கு சென்ற போலீசாருக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. அந்த இளைஞன் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிரிட்ஜ் இருந்துள்ளது. அதை திறந்து பார்த்த போது அதில் துண்டு துண்டாக மனித உடல்கள் இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது இளம்பெண்ணின் உடலாக தான் இருக்க வேண்டும். அவன் இந்த பெண்ணை கொன்று இருக்க வேண்டும் என சந்தேகித்த போலீசார், இந்த இளைஞனை கைது செய்தனர். ஆனால் இது வெறும் ட்ரைலர் தான் என விசாராணையில் தெரியவந்தது.

அந்த இளைஞன் பெயர் தகாஹிரோ ஷிரைஷி வயது 34. டோக்கியோ அருகில் உள்ள கனகாவா மாகாணத்தின் ஜாமா நகரை சேர்ந்த நபர் தகாஹிரோ ஷிரைஷி. தீவிர மனநோயால் பாதிக்கப்பட்ட தகாஹிரோ வீழ்த்துவதற்கு எளிதில் இருக்கும் பெண்களை திட்டமிட்டு வலையில் வீழ்த்தி உள்ளான். சமூக வலைதளமான ட்வீட்டரில் கணக்கு துவங்கிய தகாஹிரோ ஷிரைஷி, அதன் மூலம் மன உளைச்சலில் தற்கொலை எண்ணத்தில் இருக்கும் பெண்களை கண்டறிந்துள்ளான்.

அவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து, அவர்களுடன் உடலுறவு கொண்டு, அவர்களை கொலை செய்து, அவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி தனது அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே புதைத்து இருக்கிறான். கடந்த 2017ஆம் ஆண்டு மட்டுமே இவன் 8 பெண்களும் அதில் ஒரு பெண்ணின் காதலனையும் இதேபோல கொன்று வீசி உள்ளான்.

இது அத்தனையும் அந்த இளம்பெண்ணின் கொலை வழக்கில் தெரியவந்தது. இளம்பெண்களை ட்விட்டர் மூலம் டார்கெட் செய்து கொலை செய்ததால் இவனை ட்விட்டர் கில்லர் என்றே அழைத்தனர்.

இவருக்கு ஜப்பான் நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்து உத்தரவிட்டது. எனினும், ஷிரைஷியின் வழக்கறிஞர்கள், இவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்றும் உயிரிழந்த 9 பேரும் தாங்கள் உயிரிழப்பதற்கு சம்மதித்துள்ளனர் என்று வாதிட்டனர். ஆனால் அவை செல்லுபடியாகவில்லை. தகாஹிரோ ஷிரைஷி தற்போது தூக்கலிடப்பட்டார்.

ஜப்பானில் 2008ஆம் ஆண்டு டோக்கியோவினல் உள்ள ஒரு பிரபல ஷாப்பிங் மையத்தில் கத்தியால் பலரைக் குத்திய ஒருவருக்குக் கடந்த 2022 ஜூலை மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகு அங்கு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறை. மேலும், ஜப்பானில் கடந்த அக்டோபர் மாதம் ஷிகெரு இஷிபா தலைமையிலான அரசு பதவியேற்றது. அதன் பிறகு அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க: என் சாமிய கொன்னுட்டானுங்களே... அவ சொல்லுறத கேட்டாலே கண்ணுல ரத்தம் வருது... கதறிய தந்தை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share