×
 

சென்னை ஐஐடி மாணவருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கொடூரம்!! ஏரியில் மிதந்த உடல்! 6 நாள் தேடுதலில் சோகம்!

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அப்பகுயில் உள்ள அன்சா ஏரியில் சாகேத் ஸ்ரீனிவாசையா சடலமாக மீட்கப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான சாகேத் ஸ்ரீனிவாசையா (Saketh Sreenivasaiah) அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்லி நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா, பெர்க்லி (UC Berkeley) பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் அண்ட் பயோமாலிகுலர் இன்ஜினியரிங் துறையில் முதுநிலைப் படிப்பு பயின்று வந்தார். கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அவர் காணாமல் போனதாக தகவல் வெளியானது.

சாகேத்தின் சக மாணவர்கள் மற்றும் அறைத்தோழர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பெர்க்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அவர் கடைசியாக காணப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள டில்டன் ரீஜியனல் பார்க் பகுதியில் அவரது பேக் (பாஸ்போர்ட், லேப்டாப் உள்ளிட்டவை) ஒரு வீட்டு வாசலில் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. இதனால் ஏரியா அன்சா ஏரி (Lake Anza) உள்ளிட்ட பகுதிகளில் சோனார், ட்ரோன்கள், டைவர்கள் என பெரிய அளவில் தேடுதல் நடத்தப்பட்டது.

பிப்ரவரி 14-ஆம் தேதி (சனிக்கிழமை) மதியம் 2 மணியளவில் அலமேடா கவுண்டி ஷெரிப் ஆபிஸ் டைவ் டீம் ஏரியில் சடலத்தை மீட்டது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் இதை உறுதிப்படுத்தியது. சடலம் சாகேத் ஸ்ரீனிவாசையாவின் என்று அடையாளம் காணப்பட்டது. 

இதையும் படிங்க: அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர்!! பெற்றோர் கவலை!! தேடுதல் பணி தீவிரம்!!

அவரது அறைத்தோழர் பனீத் சிங் லிங்க்ட்இனில் "அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்" என்று தெரிவித்தார். அவர் உறவு சம்பந்தமான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சமீபத்தில் "எதுவும் பரவாயில்லை" என்ற மனநிலையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

சாகேத் ஐஐடி மெட்ராஸில் படித்து 2025-இல் பட்டம் பெற்றவர். அவர் 'ஆவிஷ்கார் ஹைப்பர்லூப்' குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்து, ஹைப்பர்லூப் உயர்வேக போக்குவரத்துக்கான 'மைக்ரோசேனல் கூலிங் சிஸ்டம்' (Microchannel Cooling System) கண்டுபிடிப்பில் பங்காற்றினார். 

இது மோட்டார்கள், பேட்டரிகள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் உருவாகும் அதிக வெப்பத்தை நுண்குழாய்கள் மூலம் குளிர்ச்சியான திரவத்தால் வெளியேற்றும் அதிநவீன தொழில்நுட்பம். இதற்கான காப்புரிமையை (பேடண்ட்) பெற்ற 6 பேரில் சாகேத் ஒருவர். குழுவில் பிரசன்ன குமார், ஜெய் ஷா, அன்கித் பன்சால், அதர்வா கண்டாவே ஆகியோர் இருந்தனர்.

இந்த கண்டுபிடிப்பு ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்துக்கு பெரும் பங்களிப்பாக அமைந்தது. சாகேத் திறமையான, பணிவான, நம்பகமான ஆராய்ச்சியாளராக அறியப்பட்டவர். அவரது திடீர் மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, இந்திய தொழில்நுட்ப சமூகத்துக்கும் பெரும் இழப்பு. இந்திய தூதரகம் குடும்பத்தினருக்கு ஆதரவு அளித்து, சடலத்தை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது.

இதையும் படிங்க: அடேங்கப்பா..!! ரூ.30 கோடியில் பரிசா..!! "பொட்டு வைத்த பொம்மை" ஜாக்குலினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சுகேஷ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share