×
 

ட்ரம்ப், நெதன்யாகுவுக்கு செக் வைத்த காமெனி.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக ’பத்வா’..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று அறிவித்து, ஈரான் மதத்தலைவர் அயதுல்லா மாகேரம் ஷிராஜி பத்வா பிறப்பித்துள்ளார்.

அணு ஆயுத தயாரிப்பை கைவிட மறுத்து வந்த ஈரான் மீது பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி கடந்த 13ம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ மையங்கள், அணு ஆயுத கூடங்களை குறி வைத்து அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில், ஈரானின் பல ராணுவ தளபதிகள், பல அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.

பதிலுக்கு ஈரானும்  இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஒரு வாரமாக போர் தொடர்ந்த நிலையில், ஞாயிறன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் குதித்தது.

ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் அணு உலைகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக செவ்வாயன்று இரவு கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது.

இதையும் படிங்க: குடும்பத்துடன் கொல்லப்பட்ட ஹமாஸ் முக்கிய தலைவர்.. காஸாவில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டம்..!

இதனால் மத்திய கிழக்கில் நிலவி வந்த பதட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், 25ம் தேதி இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவை ஈரான் வென்றதற்கு எனது வாழ்த்துகள் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்தார். இஸ்ரேல் முற்றிலும் அழிந்துவிடும் என்று உணர்ந்ததால் தான் போரில் அமெரிக்கா நேரடியாக நுழைந்தது.

அந்த ஆட்சியை காப்பாற்றும் முயற்சியாகவே போரில் நுழைந்தாலும், அது எதையும் சாதிக்கவில்லை. அமெரிக்காவின் முகத்தில் ஈரான் மிகப்பெரிய அடியை கொடுத்திருக்கிறது. கத்தாரில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ தளத்தையே தாக்கி உள்ளோம்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அமெரிக்காவின் முக்கியமான மையங்களை ஈரானால் அணுக முடியும் என்பதும், தேவை என்றால்  தாக்க முடியும் என்பதும் தான். 

இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்தில் மீண்டும் நடக்கலாம். ஏதாவது ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், எதிரி நிச்சயம் அதிக விலை கொடுக்க நேரிடும் என்றும் கமெனி எச்சரித்தார். இது தொடர்பாக செய்தி சேனலுக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன். அவர் நன்றியில்லாமல் இருக்கிறார். அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்றால், ஈரானில் குண்டுகள் வீச உத்தரவிடுவேன் என்றார்.

இந்த நிலையில் ஈரான் ஆட்சியாளர் கமேனியை கொல்ல திட்டம் போட்டதற்கு கண்டனம் தெரிவித்த அந்நாட்டின் மதத் தலைவர்களில் ஒருவரான அயதுல்லா மாகேரம் ஷிராஜி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று கூறி பத்வா பிறப்பித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது; முஸ்லிம் சமூகத்தின் மதகுருவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 


முஸ்லிம்கள் அனைவரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டு தலைவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.அச்சுறுத்தல்களில் இருந்து மதகுருக்களை பாதுகாப்பது முஸ்லிம்களின் கடமையாகும். இந்த புனிதத்தை மீறுவது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும். இந்த நாடுகளுக்கு முஸ்லிம் நாடுகள் ஆதரவு அளிக்க தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இறை தண்டனை உறுதி என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இஸ்ரேல் செய்த பயங்கரம்.. 60 சடலங்களுடன் ஈரானை உலுக்கிய இறுதி ஊர்வலம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share