×
 

ஹார்முஸ் ஜலசந்தி கிடையாது! இனி ட்ரம்ப் ஜலசந்தி!! சிறந்த அமைதி தூதுவர் நான்!! அமெரிக்க அதிபர் தம்பட்டம்!

தன்னை ஒரு மிகச்சிறந்த அமைதித் தூதுவராக உலகம் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே தனது விருப்பம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பாரம்பரியத்தை “மிகச் சிறந்த அமைதி தூதுவர்” என்று வர்ணித்து, கடந்த ஒரு வருடத்தில் எட்டு போர்களை தான் நிறுத்தியதாக உரிமை கோரினார். சவுதி அரேபியா ஆதரவில் மியாமியில் நடைபெற்ற Future Investment Initiative (FII) உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட போரை தான் தடுத்து நிறுத்தியதாகவும் விவரித்தார்.

“இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு வாரம் முழுவதும் ஒன்றுக்கொன்று தாக்குதல் நடத்தின. ஏற்கெனவே ஒன்பது விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவர்கள் போரில் ஈடுபட்டிருந்தனர். நான் அவர்களை நிறுத்தினேன். எப்படி? ‘நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டால், இரு நாடுகளுக்கும் 250 சதவீத வரி விதிப்பேன்’ என்று எச்சரித்தேன். உடனே அவர்கள் ‘இல்லை, இல்லை’ என்று கூறி போரை நிறுத்தினர். இப்படித்தான் நான் அந்தப் போரை நிறுத்தினேன்” என்று டிரம்ப் பெருமிதத்துடன் கூறினார்.

ஹார்முஸ் ஜலசந்தி பற்றி பேசிய டிரம்ப், அதை வேடிக்கையாக “Strait of Trump” (டிரம்ப் ஜலசந்தி) என்று அழைத்தார். பின்னர் சிரித்தபடியே “இது தற்செயலானது அல்ல” என்று திருத்தினார். ஈரானுடன் எந்த ஒப்பந்தம் செய்தாலும் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்பது தனது நிபந்தனை என்றும், எண்ணெய் ஏற்றுமதிக்கான கடல் வழி தடையின்றி இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: கவலையே படாதீங்க! கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்! போர் விரைவில் முடியும் என்கிறார் அதிபர் ட்ரம்ப்!

“ஈரான் 47 ஆண்டுகளாக மத்திய கிழக்கின் குண்டர் என்று அறியப்பட்டது. ஆனால் இப்போது அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தலைமை, ராணுவம், அணு திட்டம் அனைத்தும் அமெரிக்காவின் ‘Epic Fury’ ராணுவ நடவடிக்கையால் பலவீனமடைந்துள்ளன” என்று டிரம்ப் கூறினார். ஈரான் மீதான தாக்குதலை அவர் “போர்” என்று அழைக்க மறுத்து, “ராணுவ நடவடிக்கை” என்றே குறிப்பிட்டார்.

நேட்டோ அமைப்பை கடுமையாக விமர்சித்த டிரம்ப், “நேட்டோ ஒரு காகிதப் புலி (paper tiger). நாங்கள் எப்போதும் நேட்டோவுக்கு உதவுகிறோம், ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவுவதில்லை. உண்மையான பெரிய போர் வந்தால் அவர்கள் வரமாட்டார்கள்” என்று கிண்டல் செய்தார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்ததாகவும், இல்லையென்றால் இரண்டு முதல் நான்கு வாரங்களில் அணு ஆயுதம் தயாரித்திருக்கும் என்றும் டிரம்ப் கூறினார். சவுதி பிரதிநிதிகளிடம் பேசிய அவர், “ஈரான் அதை உங்களுக்கும், இஸ்ரேலுக்கும், மற்ற அனைவருக்கும் பயன்படுத்தியிருக்கும்” என்றார். மேலும், “கியூபா அடுத்தது” என்று கூறிவிட்டு, “மீடியா இதை புறக்கணிக்கவும்” என்று வேடிக்கையாகச் சொன்னார்.

தான் ஒரு அமைதி தூதுவர் என்று வலியுறுத்திய டிரம்ப், அர்மேனியா-அசர்பைஜான், காங்கோ-ருவாண்டா, கம்போடியா-தாய்லாந்து உள்ளிட்ட எட்டு போர்களை தான் நிறுத்தியதாக உரிமை கோரினார். தற்போது ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு... தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட தொண்டர்கள் ... ஷாக்கில் எடப்பாடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share