×
 

ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைக்கவே கூடாது! கிடைச்சா அவ்ளோதான்!! பகீர் கிளப்பும் ட்ரம்ப்!

''ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது. கிடைத்துவிட்டால் உடனடியாக தாக்குதல் நடத்த பயன்படுத்துவார்கள்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியுடன் ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். 

வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அவர், ஈரானை இரண்டு வாரங்களுக்குள் சின்னாபின்னமாக்கிவிட்டதாகவும், அவர்களிடம் கடற்படை, விமானப்படை, விமான எதிர்ப்பு ஆயுதங்கள், தலைமைத்துவம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

டிரம்ப் கூறியதாவது: “ஈரானின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டது. புதிய தலைமை அமைத்தாலும் அதுவும் அழிக்கப்பட்டுவிட்டது. ஒட்டுமொத்த உலகத்திற்காகவும் நாங்கள் மகத்தான பணியைச் செய்துள்ளோம். கடந்த 50 ஆண்டுகளாக அணு ஆயுதம் தேடி வந்த கொடிய நாட்டை ஒழித்துக்கட்டியுள்ளோம். 

இதையும் படிங்க: ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்ப்போம்!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் பெறக்கூடாது. அவர்களிடம் அணு ஆயுதம் கொடுத்தால், உலகின் பெரும் பகுதி தகர்க்கப்படும். அவர்கள் அதை உடனடியாக – ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாளுக்குள் – பயன்படுத்திவிடுவார்கள். இஸ்ரேல் அணு ஆயுதத்தை ஒருபோதும் பயன்படுத்தாது. நான் போர்களை விரும்பாதவன். 

ஆனால் ஈரானின் தலைவர்கள் வன்முறைக்காரர்கள். கடந்த மூன்று வாரங்களில் 32,000 போராட்டக்காரர்களைக் கொன்றுள்ளனர். அவர்களிடம் அணு ஆயுதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏதோ கோளாறு உள்ளது. அவர்களின் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. இது விரைவில் முடிவடையும். நமக்கு பாதுகாப்பான உலகம் வரப்போகிறது.”

இதே கருத்தை துணை அதிபர் ஜேடி வான்ஸும் ஆதரித்துள்ளார். “ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்ற அதிபரின் நிலைப்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். அதிபரின் தலைமையில் இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டோம். ஜனநாயகக் கட்சியினராக இருந்தாலும், குடியரசுக் கட்சியினராக இருந்தாலும், நமது படைகளின் வெற்றிக்காகவும் பாதுகாப்புக்காகவும் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இரண்டு வாரங்களாக நடந்து வரும் இந்தப் போரில் அமெரிக்கா-இஸ்ரேல் தரப்பு ஈரானின் ராணுவ வலிமையை பெரிதும் சிதைத்துள்ளதாக டிரம்ப் தரப்பு உரிமை கோருகிறது. ஈரானின் அணு திட்டத்தை முற்றிலும் தடுத்து, உலக அமைதியை பாதுகாக்கும் முயற்சி என்று அமெரிக்கா வாதிடுகிறது.

ஆனால், போர் தொடர்வதால் எண்ணெய் விலை உயர்வு, பிராந்திய பதற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன. டிரம்பின் இந்த கடுமையான அறிக்கை சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: போர் நிறுத்தம் வேணுமா? மூணே வழிதான் இருக்கு! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கண்டிஷன் போடும் ஈரான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share