×
 

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தி வணிகப் போக்குவரத்திற்காக தொடர்ந்து திறந்தே இருக்கும் என்றும், சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வணிகக் கப்பல்களின் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து திறந்தே இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரானில் உள்ள 140-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தொடர் தாக்குதல்களின் பின்னணியில், மறு அறிவிப்பு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கடல் பாதையில் கப்பல்கள் செல்ல அனுமதி இல்லை என்ற தகவல் வெளியானதால், சர்வதேச சந்தைகளில் பதற்றம் அதிகரித்தது.

இதையும் படிங்க: இரண்டு நாட்டு ராணுவத்தை மொத்தமா அழிச்சிட்டோம்! ஒரே ஒரு தாக்குதல் போதும்!! ட்ரம்ப் சுயதம்பட்டம்!

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தி வணிகப் போக்குவரத்திற்காக தொடர்ந்து திறந்தே இருக்கும் என்றும், சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனுடன், அமெரிக்க மத்திய கட்டளையகமும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்கள் தொடர்ந்து பயணித்து வருவதாகவும், கடல்சார் போக்குவரத்து இயல்பு நிலைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எரிசக்தி வர்த்தக வழித்தடமாக இருப்பதால், அங்கு ஏற்படும் எந்த மாற்றமும் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச வர்த்தகம் மற்றும் பல நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்த புதிய போர் பதற்றத்தை உலக நாடுகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

இதையும் படிங்க: "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share