×
 

ட்ரம்புடன் பாக்., ராணுவ தளபதி ரகசிய சந்திப்பு..! இந்தியாவுக்கு எதிராக சதியா? ஈரானுக்கு வைக்கபோகும் ஆப்பா?

பாக்., ராணுவத் தளபதியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தச் சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டம் ஆபத்தானது. அது இஸ்ரேலுக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலானது என்று கூறி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சி படை மூத்த அதிகாரியும், ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான ஜெனரல் மோசென் ரீஸி, ஈரான் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது: 

எங்களுக்கு எதிராக இஸ்ரேல் அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தினால், பதிலடியாக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசும். ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எங்களுக்கு உறுதி அளித்துள்ளது. ஈரானுக்கு பக்கபலமாக இருப்போம். முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. ஈரானிடம் ரகசிய வலிமை உள்ளது. அதை இன்னும் உலகத்துக்கு வெளிப்படுத்தவில்லை என்றார்.

இந்த நிலையில், ஈரான் ராணுவ அதிகாரியின் கருத்தை பாகிஸ்தான் உடனடியாக மறுத்தது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஈரான் அதிகாரி கூறுவதுபோல பாகிஸ்தான் எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. தவிர, சர்வதேச அளவில் அணுசக்தி ஒப்பந்தங்களை பாகிஸ்தான் முறையாக கடைபிடித்து வருகிறது. 

இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

அணு ஆயுத கட்டுப்பாடுகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். பாகிஸ்தானின் மண்ணையும், மக்களையும் பாதுகாப்பதற்கும், எதிரிகளின் அச்சுறுத்தலில் இருந்து எங்களை காத்துக் கொள்ளவுமே அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறோம்.

அதேபோல, எங்கள் அண்டை நாடுகள் மீது நாங்கள் ஆதிக்கம் செலுத்த நினைப்பது இல்லை. அண்டை நாடுகள் மீது இஸ்ரேல்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. சமீபகாலமாக, இஸ்ரேல் அத்துமீறி செயல்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிலையில்  5 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீரை இன்று வெள்ளை மாளிகையில் சந்திக்கும் அதிபர் டிரம்ப், அவருடன் மதிய உணவு விருந்தில் ஈடுபடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அமெரிக்கப் பயணத்தின் போது பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரையும் சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இன்று ட்ரம்பிடம் போனில் பேசிய மோடி, ஜம்மு காஷ்மீர்  விவகாரத்தில் 3வது நாட்டின் சமரச முயற்சியை நாங்கள் என்றுமே அனுமதித்தது இல்லை. இனியும்  அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறினார். பாகிஸ்தான் இனிமேலும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் அதே வழியில் இந்தியா பதிலடி கொடுக்கும். பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், இந்தியா போர் மூலம் பதிலடி கொடுக்கும். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை எனவும் டிரம்பிடம் மோடி கூறினார். 

இதனால் அமெரிக்க அதிபருடனான பாக்., ராணுவ தளபதியின் இந்த சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக திரும்புமா? அல்லது இஸ்ரேல், ஈரான் இடையிலான போரில் ஈரானை தனித்து விடச் செய்யுமா? என பல்வேறு யூகங்கள் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க: துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share