×
 

தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் விஜய் இரண்டு நாட்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அரசியல் களம் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டத் தவறியது.

இந்த நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதில் பெரும்பான்மையை நிரூபிக்க இரு வாரங்கள்அவகாசம் கோரினார். தவெக 108 இடங்கள், திமுக கூட்டணி சுமார் 73 இடங்கள், அதிமுக கூட்டணி சுமார் 53 இடங்கள் என பிரிந்துள்ளன.

எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத தொங்கு சட்டசபை சூழல் உருவானது. இதனால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. விஜய் தரப்பு அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் தொடர்பு கொண்டு ஆதரவு தேடத் தொடங்கியது. தவெகவின் 108 உறுப்பினர்களுடன் 10 பேரின் ஆதரவு தேவைப்படும் நிலையில், இந்தப் பேச்சுகள் முக்கியத்துவம் பெற்றன. காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது.

இதையும் படிங்க: "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

இதையடுத்து ஆட்சியமைக்க விஜய் ஆளுநரிடம் உரிமைக் கோரினார். இந்த நிலையில், நாளை காலை 11 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 14 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற இரண்டு நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவகாசம் விதிக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல்வராக விஜய் பதவியேற்கும் பட்சத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்குள் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: #BREAKING: தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்..! ஆளுநருடன் சந்திப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share