விஜய் தேர்தல் வாக்குறுதி என்ன? தவெக தேர்தல் அறிக்கை!! தென் மாவட்டங்களில் இருந்து ஆட்டம் ஆரம்பம்!!
மக்கள் மனங்களில் இருப்பது தேர்தல் வாக்குறுதிகளில் அமைய வேண்டும் என்பதே தவெக தலைவரின் நோக்கம் என தவெக நிர்வாகி அருண்குமார் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 12 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகரன், தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ், மயூரி, சம்பத்குமார், அருள் பிரகாசம் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு மக்களின் கருத்துகளை நேரடியாக கேட்கும் பயணத்தை மதுரையில் தொடங்கியது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் குழுவினரை சந்தித்தனர். விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், நெசவாளர்கள், சிறுதொழில் முனைவோர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
மக்களிடம் அவர்களின் எதிர்பார்ப்புகள், தேவைகள், பிரச்னைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர். இந்த கருத்துகளை தேர்தல் அறிக்கையில் (manifesto) சேர்த்து, மக்களின் விருப்பங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதே தவெக தலைவர் விஜய்வின் நோக்கம் என்று குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சீனியர் செங்கோட்டையன் மிஸ்ஸிங்!! Why Bro?! தவெக தேர்தல் அறிக்கை குழுவால் சர்ச்சை!!
தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் இது குறித்து கூறியதாவது: “2026 சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தனது களப் பணியை மதுரையில் தொடங்கியுள்ளது. தென் மண்டல மக்கள் பெருந்திரளாக வந்து தங்கள் எதிர்பார்ப்புகளை பகிர்ந்தனர். விவசாயம், தொழில்துறை, பெண்கள் நலன், சிறுதொழில், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் இருந்து முக்கிய கோரிக்கைகள் வந்துள்ளன.
மக்கள் மனதில் இருப்பதைத் தான் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்க வேண்டும் என்பது தவெக தலைவரின் உறுதியான நோக்கம். தென் மாவட்ட மக்களின் நம்பிக்கையுடன் வழங்கிய ஆலோசனைகள் நிச்சயம் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் பெறும். மக்கள் விருப்பங்கள் தவெகவின் செயல் திட்டமாக மாறும். அடுத்தடுத்த மாவட்டங்களில் இந்த பயணம் தொடரும்.”
தவெகவின் இந்த மக்கள் கருத்து சேகரிப்பு பயணம் 2026 தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என்று கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன. புதிய கட்சியாக இருந்தாலும், மக்களின் குரல்களை நேரடியாக கேட்பது தவெகவின் வேறுபட்ட அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், இந்த கருத்து சேகரிப்பு கட்சியின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தவெக இனி வட மாவட்டங்கள், கொங்கு பகுதி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதே போன்ற கருத்து சேகரிப்பு நடத்த உள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியாகும் போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படும்.
இதையும் படிங்க: இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!