×
 

மாட்டிக்கிட்ட பங்கு.. ஈரானிடம் இஸ்ரேலை கோர்த்துவிட்ட அமெரிக்கா...!

ஈரான் மீதான தாக்குதலுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். 

ஈரான் மீது தொடர் தாக்குதல்: 

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஈரானுடைய தலைநகரான நெதஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.  யூரேனியம் செறிவூட்டலைத் தொடர்ந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தொடர்ந்து எச்சரித்து வந்தது. 

இதையும் படிங்க: அள்ளி வீசிய அவதூறுகள்.. டோட்டல் சரணடைதல் வரை..! எதிர்க்கட்சிகளின் மன்னிப்பு நாடகம்..!

ஈரான் தலைநகர் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரி உசைன் சலாமி உயிரிழந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

நெதன்யாகு எச்சரிக்கை: 

ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டம், ஈரானின் அணு ஆயுதமயமாக்கல் திட்டம், ஈரானின் முக்கிய செறிவூட்டல் வசதிகள், முன்னணி அணு விஞ்ஞானிகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்ட மையத்தை குறிவைத்து தாக்கியதாக நெதன்யாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ அமைப்புகளை முற்றிலும் அழிக்கும் வரை இந்த தாக்குதல் தொடரும் என நெதன்யாகு எச்சரித்துள்ளார். 

கைவிரித்த அமெரிக்கா: 

ஈரானுடன் அணுசக்தி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள டிரம்ப் நிர்வாகம் முயற்சித்து வரும் வேளையில் இஸ்ரேலிய தாக்குதல் நடந்துள்ளது. அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஏற்கனவே ஈரானிய அதிகாரிகளுடன் ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு அமெரிக்கா உதவியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அது உதவியதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, அமெரிக்காவிற்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இஸ்ரேலின் தனிப்பட்ட முடிவும் என்றும் அறிவித்துள்ளார். 

“இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்தது. நாங்கள் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும்” எனக்கூறியுள்ளார். மேலும் இஸ்ரேல் தனது தற்காப்புக்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று நம்புவதாக அமெரிக்காவிடம் தெரிவித்ததாகவும், ஜனாதிபதி டிரம்பும் நிர்வாகமும் நமது படைகளைப் பாதுகாக்கவும்,அதற்காக இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ள அவர், ஈரான் அமெரிக்கா மீதோ அல்லது இஸ்ரேலில் உள்ள அமெரிக்க பணியாளர்களையோ குறிவைக்கக்கூடாது” என எச்சரித்துள்ளார். 
 

இதையும் படிங்க: பொன்முடிக்கு அடுத்த இடி! டிஜிபி, சென்னை கமிஷனருக்கு பறந்த கோர்ட் உத்தரவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share