இப்பிடி அசிங்கப்படுத்தக் கூடாது!! சீன அதிகாரிகள் கொடுத்த பரிசுகளை குப்பையில் வீசிய அமெரிக்கர்கள்!!
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் சீனா சென்று திரும்பினார். அவருடன் அமெரிக்க அரசு அதிகாரிகளும் சென்றனர். மூன்று நாட்கள் பயணத்தில், அவர்களுக்கு சீன அதிகாரிகள் பல்வேறு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் சீனாவுக்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அவருடன் உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர். சீன அதிகாரிகள் டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்கு பல்வேறு நினைவுப் பரிசுகளை வழங்கினர். ஆனால், இந்தப் பரிசுப் பொருட்களை அதிபரின் பிரத்யேக விமானம் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’க்குள் எடுத்துச் செல்லக் கூடாது என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டது.
இதனால், சீனா வழங்கிய மின்னணுப் பொருட்கள் உள்ளிட்ட பரிசுகளை விமானத்துக்கு அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் அமெரிக்க அதிகாரிகள் வீசியெறிந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது ஒன்றும் புதிதல்ல என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைமுறை தலைமுறையாக சீனாவுக்கு வரும் அமெரிக்க அதிகாரிக் குழுக்கள் இதே நடைமுறையைக் கடைப்பிடித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவை உள்ளிழுத்து பாஜகவுக்கு செக் வைத்த ரங்கசாமி!! என்.ஆர்.காங்கிரஸ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!
சீனா தனது ரகசிய கண்காணிப்பு மற்றும் உளவு உபகரணங்களுக்கு உலகப் புகழ் பெற்றிருப்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, எந்தவித உளவு சாதனங்களும் அமெரிக்க அதிபரின் விமானத்துக்குள் நுழையக் கூடாது என்பதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மிகவும் உறுதியாக உள்ளது.
சீன அதிகாரிகள் வழங்கிய பரிசுகளில் மின்னணு சாதனங்கள், கேஜெட்டுகள் உள்ளிட்டவை அதிகம் இருந்ததால், அவற்றை விமானத்தில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அமெரிக்கா-சீனா இடையிலான நம்பிக்கையின்மை மற்றும் பாதுகாப்பு அச்சத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போட்டி, தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் உளவு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நிலவும் நிலையில், இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க அதிபரின் பயணங்களின்போது இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக வெளியுறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை அதிகப்படியான பாதுகாப்பு அணுகுமுறை என்று விமர்சிக்க, மற்றவர்கள் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது சரியானது என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: என் ரூமுக்கு தனியா வா!! கொஸ்ட்டீன் பேப்பர் தரேன்!! மாணவியிடம் அத்துமீறிய கல்லூரி பேராசிரியர் கைது!