×
 

அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!

இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரைவு அமைதித் திட்டம் குறித்துப் பேசப்பட்டு வருகிறது.

ஈரானிடம் அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை, செறிவூட்டப்பட்ட யூரேனியம் தான். அதை வைத்து ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது என அமெரிக்கா பயப்படுகிறது. சரி இந்த யுரேனியத்தை கொடுத்துவிட்டால் பிரச்சனை முடிந்துவிடுமா? என்று கேட்டால் இல்லை. யுரேனியம் கிடைத்தாலும் கூட ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க மாட்டோம் என்று டிரம்ப் கறாராக கூறியிருக்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் பதற்றமான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் உடன்படிக்கைக்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வரும் பின்னணியில் ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

'பிபிஎஸ் நியூஸ்' நடத்திய தொலைபேசி நேர்காணலின் போது, “தற்போது பேசப்பட்டு வரும் அமைதி உடன்படிக்கையின்படி, ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை அமெரிக்காவிடம் ஒப்படைத்தால், அதற்குப் பகரமாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுமா?” என்று ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “இல்லை, இல்லவே இல்லை. பொருளாதாரத் தடைகளில் எந்தத் தளர்வும் கிடையாது. அவர்கள் தங்களது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்கப் போகிறார்கள்; ஆனால் அதற்காகப் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது” என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: ஈரான் தோத்தாக்கூட ஜெயிச்சிருச்சுனு சொல்வாங்க!! பத்திரிக்கையாளர்கள் மீது அதிபர் ட்ரம்ப் காட்டம்!!

இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரைவு அமைதித் திட்டம் குறித்துப் பேசப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 'ஹார்முஸ் ஜலசந்தி' வழியிலான வணிகக் கப்பல் போக்குவரத்தைப் போருக்கு முந்தைய நிலைக்குக் கொண்டு வர ஈரான் விரும்புகிறது. அதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையையும், ராணுவக் குவிப்பையும் குறைக்க வேண்டும் என்பது ஈரானின் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது 

இதையும் படிங்க: #BREAKING கடலில் கண்ணிவெடி... ஈரானை கதி கலங்கவிட்ட அமெரிக்கா... உச்சக்கட்ட அதிர்ச்சியில் உலக நாடுகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share