கடும் கோபத்தில் கண்கள் சிவந்த டிரம்ப்... நள்ளிரவில் ஈரானை பதம் பார்த்த அமெரிக்கா... நடந்தது என்ன?
அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு உடன்பாட்டை நாடி வரும் வேளையில், ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் கடற்பரப்பில், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது. இந்த ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட போர் பதற்றத்திற்கு நடுவே திடீர் திருப்பம்... அதிரடி முடிவை உலக நாடுகளுக்கு அறிவித்த ஈரான்...!
வீழ்த்தப்பட்ட அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டரின் இரண்டு பணியாளர்கள் அமெரிக்கக் கடல் ட்ரோன் மூலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக சென்ட்காம் தெரிவித்தது. இதுபோன்ற ஒரு நடவடிக்கையில் அந்த வகை நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டதை அமெரிக்க இராணுவம் பகிரங்கமாக உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி, ஹெலிகாப்டர் மீதான தாக்குதலை நடத்த ஈரான் ஒரு ட்ரோனைப் பயன்படுத்தியது. ஆனால், ஈரானிய ட்ரோன் வேண்டுமென்றே தாக்கியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என, பிபிசியின் அமெரிக்கப் பங்காளியான சிபிஎஸ் நியூஸிடம் பெயர் குறிப்பிடப்படாத ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்திற்கு ஈரான் பொறுப்பேற்கவில்லை என்று அரை-அரசு செய்தி நிறுவனமான மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், தற்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் தளங்களை குறிவைத்து அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஈரானின் கடற்படை தளங்கள் அமைந்துள்ள கேஷ் தீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல்களால், மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: போர் பதற்றம் உச்சம்.. ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரம்..!! இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!!