விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்..! கையை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்..! பரபரப்பு..!
விஜய்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று விசிக தொண்டர் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் மூலம் புதிய அத்தியாயத்தை தொடங்கிய நிலையில், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது. அத்தகைய ஒரு சம்பவமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் ஒருவர் விஜய்க்கு ஆதரவாக தனது கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ரசிகர்களின் அர்ப்பணிப்பை மட்டுமல்ல, அரசியல் உணர்ச்சிகளின் ஆழத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவென எழுந்த நிலையில், ஆட்சி அமைக்கும் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு முக்கியமானதாக மாறியது. விஜயின் வெற்றிக்காகவும், அவரது அரசியல் பயணத்திற்காகவும் தங்களது உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விஜய் ஆட்சிக்கு வருவது பெரிய சிக்கலில் இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழக தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் ஒருவர் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறி விசிக தொண்டர் ஒருவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: திருமா. எப்போ வருவாரு..? ஆதரவு தருவாரு..? “ 4 மணிக்கு” விசிக வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!
திருமாவளவன் இன்று தமிழக வெற்றிக்கழகத்திற்கான ஆதரவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகமான அம்பேத்கர் திடலில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். அந்த இடத்தில் விசிக தொண்டர் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: BP எகிறுதே..! திக்.. திக்.. நிமிடங்கள்..! திருமா. பதிலுக்கு காத்திருக்கும் தமிழ்நாடு..!