×
 

வெனிசுலாவில் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு! 4,300 பேர் காயம்!! முழு வீச்சில் நடக்கும் மீட்புப்பணி!

வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4300 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று ஏற்பட்ட அடுத்தடுத்த இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,300 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நாட்டின் தலைநகர் கராகசுக்கு மேற்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொரோன் கடற்கரைப் பகுதியில் 39 வினாடி இடைவெளியில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவிலும், இரண்டாவது 7.5 ரிக்டர் அளவிலும் பதிவாகியது. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் தரையில் இருந்து 26 கிலோமீட்டர் ஆழத்திலும், இரண்டாவது 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டது. 7.5 ரிக்டர் நிலநடுக்கம் கடந்த 100 ஆண்டுகளில் வெனிசுலாவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து நிலநடுக்கம்! ஆடிப்போன வெனிசுலா! சுனாமி வார்னிங்! ஆதரவுக் கரம் நீட்ட இந்தியா தயார்! மோடி அறிவிப்பு!

இந்த இரட்டை நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் பிளந்து வெடிப்புகள் ஏற்பட்டன. கராகசை ஒட்டிய லா குவைரா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதால் அங்கு ‘பேரிடர் மண்டலம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கராகசின் அல்டமிரா பகுதியில் 22 மாடி உயரமுள்ள ஒரு பெரிய கட்டடம் முழுமையாக இடிந்து தரைமட்டமானது. பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து குப்பைகளாகக் குவிந்துள்ளதால், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

வெனிசுலாவின் முக்கிய விமான நிலையமான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டு, தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் படையினர், தேசிய பாதுகாப்புப் படைகள் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

வெனிசுலா அதிகாரிகள் மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். சர்வதேச உதவிகளும் வரவழைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேரிடர் வெனிசுலாவின் ஏற்கெனவே பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் மேலும் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வரும் நிலையில், உலக நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இதையும் படிங்க: எ.வ.வேலு நல்ல ஆதாரத்தோடு சிக்கியிருக்கிறார்!! துணிச்சலோடு எதிர்கொள்ளட்டும்! அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share