நான் தான் மூத்தவன்... விஜய் என் டயலாக்கை பேசக்கூடாது...!! சீமான் தடாலடி..!!
விஜய் என் வசனத்தை பேசக்கூடாது என சீமான் கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனித்து போட்டியிடுவது குறித்து பேசி இருந்த நிலையில் சீமான் பதிலடி கொடுத்தார். என் வசனத்தை விஜய் பேசக்கூடாது எனவும் சீமான் கூறியுள்ளார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது விஜய்யிடமிருந்து அழைப்பு வந்தால் என்று கேள்வி எழுப்பப்பட்டது. விஜய் எப்படி எனக்கு அழைப்பு விடுக்க முடியும் இது என்ன கேள்வி என்று சீமான் கேட்டார். அரசியலில் 16 வருடங்களாக களமாடி வருபவன் நான் என்றும் அனுபவத்திலும் சரி வயதிலும் சரி மூத்தவன் நான்தான் எனவும் தெரிவித்தார். நான் தான் விஜய்க்கு அழைப்பு விடுக்க வேண்டுமே தவிர தம்பி அண்ணனுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
அண்ணா, எம்ஜிஆரை பின்பற்றுவதாக கூறிவிட்டு அவர்கள் ஆரம்பித்த கட்சிகளை ஒழிக்க நினைக்கிறார் என்றும் ஊழல் கட்சி என்று கூறி வருகிறார் விஜய் எனவும் தெரிவித்தார். தனித்து நிற்பது தொடர்பான விஜய் கருத்துக்கு பதில் கொடுத்த சீமான், என் வசனத்தை விஜய் எடுத்துப் பேச கூடாது என்றும் இன்னும் நீங்கள் தனித்து நிற்கவேயில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூன்று ஆண்டுகளில் முதல் முறை... விஜய் எடுத்த அதிரடி முடிவு... யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!
நாங்கள் தான் தொடர்ந்து தனித்து நின்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து நின்று இருக்க வேண்டும் என்றும் கூறினார். விக்கிரவாண்டி, ஈரோடு தேர்தல்களில் போட்டுக்கிட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்ராஜ் அட்டாக்..!!