கொத்து கொத்தாய் வெடிக்கும் கிளஸ்டர் ஏவுகணை..! இஸ்ரேலை சூறையாட ஈரான் எடுத்த அதிரடி முடிவு..!
இஸ்ரேல்- ஈரான் இடையேயான யுத்தம் 8-வது நாளாக தொடருகிறது. இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களுடன் கொத்து குண்டுகளையும் ஈரான் வீசித் தாக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் இதற்கு தக்க பதிலடி கொடுத்தது. இப்போது இரு நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளது. ஏவுகணை, டிரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் கடும் தாக்குதலை தொடுத்தது.
இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் வயல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதில் தாக்குதலை ஈரானும் நடத்தி வருகிறது. அலை அலையாக ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் எனப்படும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் ஏவியது.
ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் கவசங்கள் தடுக்கின்றன. அதை மீறி விழுந்த ஏவுகணைகள் டெல் அவிவ், ஜெருசலேம் உட்பட பல நகரங்களை தாக்கியுள்ளன.
இதையும் படிங்க: ஈரான் மீது ராணுவ தாக்குதலா? 2 வாரத்தில் முடிவு செய்வார் ட்ரம்ப்.. வெள்ளை மாளிகை தந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!
இரு தரப்புக்கும் இடையே இன்றும் மோதல் தீவிரமடைந்த நிலையில், இஸ்ரேலின் தெற்கில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான சொரோகா மருத்துவ மையம் மீது ஈரான் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 47 பேர் காயமடைந்தனர் என்று மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானிய ஆட்சி பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனையை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் குறிவைத்தது. ஒரு பெரிய மருத்துவ மையத்தைத் தாக்கியது. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.எங்கள் மக்களைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம் இஸ்ரேல் அரசு எச்சரித்தது.
நாளுக்கு நாள் இருநாடுகளிடையே தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதிநவீன ஆயுதங்களை போரில் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தப் போரில் சர்ச்சைக்குள்ளான ஆயுதமான கிளஸ்டர் ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் தரப்பில் கூறியதாவது; கிளஸ்டர் ஏவுகணை ஒருமுறை வெடித்து, அதில் இருந்து சிறிய வகை வெடிகுண்டுகள் பிரிந்து சென்று தாக்கும். அந்த வகையில், இஸ்ரேலின் அஷோர் நகரின் மீது கிளஸ்டர் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 8 கி.மீ., தொலைவுக்கு இதன் பாதிப்பு இருந்தது. இதில், எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை, என தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எபி டெப்ரின் கூறுகையில், "பயங்கரவாத நாடு (ஈரான்) பொது மக்களை குறிவைக்கிறது. கிளஸ்டர் ஆயுதங்களைக் கூட பயன்படுத்துகிறது," எனக் குற்றம்சாட்டினார். கிளஸ்டர் ஏவுகணையை ஈரான் பயன்படுத்தியதற்கு, ஆயுதக் கட்டுப்பாட்டு சங்க குழுவின் நிர்வாக இயக்குனர் டேரில் கிம்பால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; கிளஸ்டர் ஏவுகணை போன்ற ஆயுதங்கள் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தினால், வெடிக்காத வெடிகுண்டுகளால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும், எனக் கூறினார்.
கடந்த 2008ம் ஆண்டு கிளஸ்டர் ஏவுகணைகளை பயன்படுத்த தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் 111 நாடுகள் கையெழுத்திட்ட நிலையில், ஈரான், இஸ்ரேல் அதனை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ம் ஆண்டு ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா கொடுத்த கிளஸ்டர் ஏவுகணைகளை வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இதே ஏவுகணைகளை தாக்குதலை ரஷ்யாவும் நடத்தியுள்ளது.
இதையும் படிங்க: காமெனி மேல் கை வைத்தால்.. ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய ஈராக்..! இஸ்ரேல், அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை..!