வாட்ஸ் அப், டெலிகிராமுக்கு தடை! ரஷ்ய பயனர்கள் அதிர்ச்சி! முடக்கியது ஏன்? ரஷ்யாவின் திட்டம் அம்பலம்!
ரஷ்யாவில் மட்டும் வாட்ஸ் அப் செயலியை 10 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது நாடு முழுவதும் வாட்ஸ் அப் தடை செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலிக்கு ரஷ்யாவில் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்ஆப்பை தினசரி தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்த நிலையில், இந்த தடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அரசு உருவாக்கிய ‘MAX’ என்ற புதிய செயலியை மக்கள் மத்தியில் பரவலாக்குவதற்காகவே வாட்ஸ்ஆப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்த செயலி மூலம் தகவல் பரிமாற்றத்தை முழுமையாக கண்காணிக்க முடியும் என்பதால், இது தனியுரிமை மீறல் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வாட்ஸ்ஆப் நிறுவனம் இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்ய அரசு தனது சொந்த செயலியை ஊக்குவிக்க வாட்ஸ்ஆப் சேவையை தடை செய்ய முயல்கிறது. இது 10 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களின் தகவல் தொடர்பை பெரிதும் பாதிக்கும். ரஷ்ய பயனர்களுக்கு சேவையை தொடர எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!
இதேபோல், ரஷ்யாவின் பிரபல செயலியான டெலிகிராமுக்கும் அரசு ஒழுங்குமுறை ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கடுமையாக விமர்சித்துள்ளார். “அரசு கட்டுப்பாட்டில் உள்ள செயலிக்கு மக்களை கட்டாயப்படுத்தும் முயற்சி ரஷ்யாவில் நடக்கிறது. இது சுதந்திரத்துக்கு எதிரானது” என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் மெட்டா நிறுவனத்தின் சேவைகளுக்கு தடை விதிப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மீதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா தனது சொந்த டிஜிட்டல் தளங்களை வலுப்படுத்துவதற்காக வெளிநாட்டு சமூக ஊடகங்களை ஒடுக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த தடையால் ரஷ்ய மக்களின் தினசரி தகவல் தொடர்பு பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்ஆப் பயனர்கள் தற்போது VPN உள்ளிட்ட மாற்று வழிகளை நாடி வருகின்றனர். உலக அளவில் இந்த நடவடிக்கை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அம்மாடியோவ்வ்வ்வ்வ்! இவ்வளவா? மோடியில் வெளிநாடு டூர் செலவு!! 5 ஆண்டு கணக்கு எகிறுதே! இந்திய பிரதமர்னா சும்மாவா?!