×
 

அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

ஒடிசா கட்டாக் எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் பெரும் தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

ஒடிசாவில் அரசு நடத்தும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஐசியூவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை ஐசியூவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.

கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஐசியூவில் இன்று அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், மருத்துவமனை ஊழியர்கள், தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். நோயாளிகளும் மருத்துவமனையின் பிற துறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இருப்பினும், விபத்தில் 10 நோயாளிகள் இறந்தனர், பலர் காயமடைந்தனர். நோயாளிகளைக் காப்பாற்ற முயன்றபோது சுமார் 11 மருத்துவமனை ஊழியர்கள் தீக்காயங்களுக்கு ஆளானார்கள். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், முதலமைச்சர் மோகன் சரண் மஜ்ஹி மருத்துவமனைக்கு விரைந்தார். தீ விபத்து நடந்த இடத்தை அவர் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"ட்ராமா கேர் ஐசியு மற்றும் அருகிலுள்ள ஐசியுவில் 23 நோயாளிகள் இருந்தனர். திங்கள்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஏழு நோயாளிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சிகிச்சைக்காக மாற்றப்பட்டபோது மேலும் மூன்று பேர் இறந்தனர். அவர்கள் தீக்காயங்கள் மற்றும் மூச்சுத் திணறலால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” எனக்கூறினார்.

 ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் ட்ராமா கேர் பிரிவின் ஐசியுவில் தீ விபத்து ஏற்பட்டடுள்ளது. அதிகாலை 2.30 மணி முதல் 3 மணி வரை தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக தனக்கு அறிக்கை அளிக்குமாறு தீயணைப்புத் துறையின் டிஜிபிக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

முதல்வர் மோகன் சரண் உடன் மாநில சுகாதார அமைச்சர் முகேஷ் மஹாலிங் மருத்துவமனையை ஆய்வு செய்தார். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அவர்கள் பார்வையிட்டனர். காயமடைந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் மோகன் சரண் அறிவுறுத்தினார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 நோயாளிகள் இறந்ததற்கு ஒடிசா எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். நவீன் பட்நாயக் விரைவில் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தருவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share