×
 

காற்று மாசால் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! இனி இவங்களுக்கெல்லாம் WFH..!!

காற்று மாசு அதிகரித்திருப்பதால் தனியார் மற்றும் அரசு நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணியாற்றும் படி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரக் குறியீடு (AQI) 370-ஐத் தொட்டு ‘மிகவும் மோசமான’ நிலைக்கு மாறியுள்ளதைத் தொடர்ந்து, டெல்லி அரசு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் ஊழியர்களில் 50 சதவீதம் பேருக்கு வீட்டிலிருந்து பணியாற்ற (Work From Home - WFH) அனுமதி அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இது கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (GRAP) - 3ஆம் நிலை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) வெளியிட்ட உத்தரவின்படி, இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வரும். முன்பு GRAP - 4ஆம் நிலையில் இருந்த இந்த விதிமுறை, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்குப் பிறகு 3ஆம் நிலைக்கு முன்னோக்கி மாற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் நவம்பர் 17, 19 தேதிகளில் நடத்திய விசாரணையில், “மாசு அதிகரிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்” என்று காற்று தர மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்தியது. இதனையடுத்து அதன் தலைவர், “GRAP அட்டவணையில் செய்யப்பட்ட மாற்றங்களை அனைத்து அமைப்புகளும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! காற்றின் தர குறியீடு எவ்ளோ தெரியுமா..??

டெல்லியின் காற்று தரம் தற்போது AQI 300-400 வரை உயர்ந்துள்ளதால், பொது மக்கள் குறிப்பாக குழந்தைகள், முதியோர் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும்; மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து பணி செய்யலாம். டெல்லி மாநகராட்சி (MCD) அலுவலகங்கள் காலை 8:30 முதல் மாலை 5 மணி வரை, அரசு அலுவலகங்கள் காலை 10 முதல் மாலை 6:30 வரை செயல்படும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு டெல்லி, உத்தரப் பிரதேசம் (குர்கான், பரிதாபாத், காசியாபாத், கௌதம் புத்த நகர்), ஹரியானா, ராஜஸ்தான் ஆகியவற்றின் என்சிஆர் மாவட்டங்களுக்கும் பொருந்தும். தனியார் நிறுவனங்களுக்கு வெளியான அறிவுறுத்தலில், மாசு குறைக்க 50% ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கும் இதே விதிமுறை பொருந்தலாம் என காற்று மாசு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 21 அன்று GRAP -4 நடவடிக்கைகள் அமலானது போல, இம்முறை முன்கூட்டியே 3ஆம் நிலை அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காற்று மாசு பிரச்சனையிலிருந்து மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க டெல்லி அரசு கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து இருக்கிறது. இது தவிர கட்டிட இடிபாடுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் டீசல் ஜெனரேட்டர்கள் தடை, போக்குவரத்து நெரிசல் குறைப்பு, மெட்ரோ/பஸ் சேவைகள் அதிகரிப்பு, பொது அறிவிப்புகள் போன்றவையும் அடங்கும். இது மக்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முக்கிய அடி என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆனால், தனியார் நிறுவனங்கள் இதை முழுமையாக அமல்படுத்துமா என சந்தேகம் நிலவுகிறது. கடந்த ஆண்டு போன்று, அமலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டால் மீண்டும் நீதிமன்றத் தலையீடு தேவைப்படலாம். டெல்லி அரசு, மாசு குறைக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளது. காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் டெல்லி அரசு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகளையும் ஒத்தி வைக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! காற்றின் தர குறியீடு எவ்ளோ தெரியுமா..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share