"சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்!": கரூர் வழக்கின் 3-வது கட்ட விசாரணை டெல்லியில் இன்று தொடக்கம்!
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் 3வது முறையாக இன்று டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின்கடந்த ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முந்தைய இரண்டு கட்ட விசாரணைகள் தலா 6 மணி நேரம் வரை நீடித்தன. இன்று புதிய ஆதாரங்கள் மற்றும் தரவுகள் குறித்துக் கூடுதல் விளக்கம் கேட்கப்படுவதால், இந்த விசாரணை மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை (சுமார் 6 முதல் 7 மணி நேரம்) நீடிக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!
இந்த வழக்கில் விஜய்யைத் தவிர, சிபிஐ தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ள பிற முக்கிய நபர்கள்:
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூட்ட ஏற்பாடுகள் மற்றும் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக இவர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளார். தவெக தேர்தல் பிரச்சார நிர்வாக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் திட்டமிடல் தொடர்பாக இவர் மீது வழக்கு உள்ளது.
தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. வி. செந்தில் பாலாஜி (திமுக எம்.எல்.ஏ): கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர். இவரிடம் வரும் மார்ச் 17, 2026 அன்று விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அவரும் ஆஜராவதை உறுதி செய்துள்ளார்.
தவெக கரூர் மாவட்டச் செயலாளர். இவர் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுப் பிணையில் உள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக தலைமையிலான கூட்டணியில் தவெக? - மாவட்ட செயலாளர்களுடன் என்.ஆனந்த் ரகசிய ஆலோசனை!