புற்றுநோயை வெல்லும் இந்திய குழந்தைகள்! 94.5% பேர் உயிர் பிழைப்பதாக எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!
இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குப் புதிய நம்பிக்கையூட்டும் வகையில், எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை நடத்திய ஆய்வில் மிக முக்கியமான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்திய மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் சுமார் 94.5 சதவீதம் பேர் சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக உயிர் பிழைப்பதாக டில்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. ‘தேசிய குழந்தைகள் புற்றுநோயில் இருந்து உயிர்ப்பிழைத்தவர்கள் திட்டம்’ என்ற அமைப்பின் கீழ், நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தை மருத்துவப் புற்றுநோயியல் பிரிவுத் தலைவர் டாக்டர் ரச்சனா சேத் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், உலகப்புகழ் பெற்ற லான்செட் மருத்துவ இதழில் வெளியாகி இந்திய மருத்துவக் கட்டமைப்பின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளன. 2016 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், டில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 20 முக்கிய நகரங்களில் சிகிச்சை பெற்ற சுமார் 5,400 குழந்தைகளின் தரவுகள் இந்த கேஸ் ஸ்டடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில், சிகிச்சை முடிந்து கடந்த 5 ஆண்டுகளில் 94.5 சதவீதக் குழந்தைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிந்தைய குழந்தைகளின் நிலை குறித்த முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில், இந்த முதல் ஆராய்ச்சி மிகப்பெரிய பாசிட்டிவ் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய மருத்துவ மற்றும் உளவியல் ரீதியான சவால்களை நாம் தொடர்ந்து மானிட்டர் செய்ய வேண்டும் என டாக்டர் ரச்சனா சேத் எச்சரித்துள்ளார். சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து அப்டேட் செய்யப்பட்ட நவீன சிகிச்சைகளை அளித்தால், குழந்தைப் பருவ புற்றுநோயை முழுமையாக காக் அவுட் செய்ய முடியும் என்பதற்கு இந்தப் புள்ளிவிவரங்களே சாட்சியாக அமைந்துள்ளன.
இதையும் படிங்க: “கருப்பை வாய் புற்றுநோய் இனி இல்லை!” - இளம்பெண்களுக்கு இலவச HPV தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்.
இதையும் படிங்க: சிட்னியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முன்னிலை!