பெங்களூர் கூட்ட நெரிசலில் சிறுவன் பலி... அவனுக்காக ரூ.100 கோடி பணம் சேர்த்தேன்; ஆனால்... தந்தை கதறல்!!
பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை கதறி அழும் வீடியோ வெளியாகி காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
2025 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 18 வது சீசனின் பைனலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனை ஆர்சிபி ரசிகர்கள், கர்நாடகா மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து பைனல் முடிந்த மறுநாள் ஆர்சிபி அணி வீரர்கள் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்துக்கு கோப்பையுடன் வந்தனர். கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து அனைவரையும் வரவேற்றார். அதன்பிறகு விதான சவுதா, பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனால் விதானசவுதா முதல் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் வரை ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பல லட்சம் பேர் குவிந்தனர். அப்போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் இறந்தனர். 47 பேர் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் பூமிக் என்ற சிறுவன் உயிரிழந்தார். 21 வயதான அவர், தீவிர ஆர்சிபி ரசிகர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பூமிக்கின் தந்தை கதறி அழுத வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவம்... லிஸ்ட் போட்டு கேள்விகளை அடுக்கிய நீதிமன்றம்!!
பூமிக்கின் உடலை பார்த்து அவரது தந்தை கதறி அழுதபோது, என் மகன் ரோட்டில் இறந்து விட்டான். அவனை விட்டு நான் ஒரு மணிநேரம் கூட பிரிந்து இருந்தது இல்லை. இன்ஜினியரிங் படித்தான். ஆம்புலன்ஸ் இல்லை என்று ஜீப்பில் ஏற்றி சென்றுள்ளனர். அவனை எப்படியெல்லாம் வளர்த்தேன். இந்த உலகில் யாருக்கும் இத்தகைய நிலை வர கூடாது. என் மகனின் உடலை வெட்டாதீங்க. எனக்கு ஒரேயொரு மகன் தான். அவனது உடலை வெட்டாமல் என்னிடம் ஒப்படையுங்க. ஒரேயொரு மகனையும் நான் இப்போது இழந்து நிற்கிறேன்.
என்னிடம் சொல்லாமலே அவன் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு வந்துவிட்டான். என் மகனுக்காக இரவு, பகல் பாராமல் பணம் சம்பாதித்தேன். கோடி கோடியாய் பணம் சம்பாதித்தேன். பல பேருக்கு அன்னதானம் செய்தேன். நூறு கோடிக்கு சொத்து சேர்த்தேன். ஆனால் அவன் இப்போது இறந்துவிட்டான். அவன் என்னை விட்டு சென்றுவிட்டன். அவனுக்கு இங்கேயே சொர்க்கத்தை நான் கொடுத்தேன். அவனுக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொடுத்தேன். இப்போது அவன் என்னை தனியாக விட்டு விட்டு சென்றுவிட்டான் என்று கதறியது அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவம்... லிஸ்ட் போட்டு கேள்விகளை அடுக்கிய நீதிமன்றம்!!