×
 

இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க... ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்... UIDAI வெளியிட்ட புதிய ரூல்ஸ்...!

போலி ஆவனங்களை தவிர்க்கவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதா? பொதுமக்கள் இதனை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். 

இந்திய குடிமக்களின் மிக முக்கியமான அடையாள அட்டையான ஆதார் கார்டு குறித்து சில அதிரடி மாற்றங்களை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு விதிகளில் திருத்தம் செய்து இந்திய தனிமனித அடையாள ஆணையமான uஐடிஏஐ ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை இன்னும் எளிமையாகவும் அதே சமயம் பாதுகாப்பாகவும் மாற்றியுள்ளது. ஆதார் அமைப்பில் வெளிப்படை தன்மையை அதிகரிக்கும். போலி ஆவனங்களை தவிர்க்கவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதா? பொதுமக்கள் இதனை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். 

இதில் மிக முக்கியமாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒரு குழந்தைக்கு ஆதார் பெற வேண்டும் என்றால் குடும்ப தலைவர் அடிப்படையிலான முறை அதாவது எட் ஆப் ஃபேமிலி முறை மட்டுமே அனுமதிக்கப்படும். இதன்படி பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் கண்டிப்பாக செல்லுபடியாகும். ஆதார அட்டையை வைத்திருக்க வேண்டும். பதிவு செய்யும்போது தாய் அல்லது தந்தையின் பயோமெட்ரிக்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு குழந்தையின் பிறந்த தேதியை உறுதிப்படுத்த பிறப்பு சான்றுதலே முதன்மை ஆவனமாக கருதப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆதார் பெற அல்லது திருத்தங்கள் செய்ய வழங்க வேண்டிய ஆவனங்களின் பட்டியலை அரசு விரிவுபடுத்தி உள்ளது. இணை கடவு சீட்டு, ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் மட்டுமின்றி, வங்கி பாஸ்புக்குகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண ரசீதுகள், எறிவாயு இணைப்பு ரசீதிகள், இன்சூரன்ஸ் ஆவனங்கள் மற்றும் சொத்து பத்திரங்களையும் கூட முகவரி சான்றாக பயன்படுத்தலாம். குறிப்பாக திருநங்கைகள் மற்றும் மாற்று திருநாாளிகளுக்கு சிறப்பு சலிகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின்

இதையும் படிங்க: சோலி முடிஞ்சுது..! வீடுகளுக்கு புதிய GAS சிலிண்டர் இணைப்பு நிறுத்தம்..! அடுத்தடுத்து வந்த புகாரால் நடவடிக்கை..!

உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் மாவட்ட சமூகநல அலுவலர்கள் வழங்கும் சான்றுதல்கள். இனி ஆதாராக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். சரியான முகவரி சான்றி இல்லாத கிராமப்புற மக்களுக்கு புதிய விதிகள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இனி உங்கள் பகுதி நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசிதல் பதிவு பெற்ற அதிகாரிகள் வழங்கும் சான்றுதர்களை வைத்து நீங்கள் முகவரி மாற்றத்தை செய்து கொள்ள முடியும். அதே சமயம் வெளிநாட்டு இந்திய குடிமக்கள்

மற்றும் நேபாளம் பூட்டான் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார். இனி 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால விசா வைத்திருப்பவர்களுக்கு அந்த விசாவின் காலம் முடியும் வரை மட்டுமே ஆதார் செல்லுபடியாகும். போலி ஆவனங்கள் மூலம் நடக்கும் அடையாள திருட்டுகளை முற்றிலுமாக தடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காலாவதியான ஆவனங்களை சமர்ப்பித்தால் அவை உடனடியாக நிராகரிக்கப்படும் என்பதோடு போலி ஆவனங்கள் தருபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது. இந்த நவீன மாற்றங்கள் மூலம் ஆதார் சேவைகள் இன்னும் வெளிப்படையாகும். சாமானிய மக்களுக்கு சிறந்த முறையில் கிடைக்கும் வகையிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் ரத்து செய்.. முதலமைச்சர் விஜய்க்கு சிபிஐ கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share