×
 

ஒரே விளம்பரம்.. மொத்தமா முடிச்சி விட்டீங்க போங்க!! அர்ஜூன் ரெட்டி நடிகருக்கு ஆப்பு வைத்த ED!!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார்.

டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா, சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய வழக்கில் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைச்சார். ‘அர்ஜூன் ரெட்டி’ புகழ் விஜய், இந்த வழக்கில் கேள்விகளை எதிர்கொண்டு வாக்குமூலம் கொடுத்திருக்கார். இந்த விவகாரம், டோலிவுட் திரையுலகில் பெரிய பரபரப்பை கிளப்பியிருக்கு.

இந்த வழக்கு, 2025 மார்ச் 19-ல ஒரு தொழிலதிபர் பி.எம். ஃபணீந்திர சர்மா, சைபராபாத் காவல்துறையில் புகார் கொடுத்ததிலிருந்து தொடங்கியது. சூதாட்ட செயலிகளை பிரபல நடிகர்களும் இன்ஃப்ளூயன்ஸர்களும் விளம்பரப்படுத்தி, இளைஞர்களை தவறாக வழிநடத்தறாங்கனு அவர் குற்றம்சாட்டினார். 

இதையடுத்து, சைபராபாத், பஞ்சகுட்டா, மியாபூர், விசாகப்பட்டினம், சூர்யாபேட்டை ஆகிய இடங்களில் நான்கு FIR-கள் பதிவு செய்யப்பட்டு, 29 நடிகர்கள், இன்ஃப்ளூயன்ஸர்கள் மற்றும் யூடியூபர்கள் மீது வழக்கு போடப்பட்டது. இதை அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) அடிப்படையில் எடுத்துக்கிட்டு, ECIR பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கு.

இதையும் படிங்க: #உங்களுடன் ஸ்டாலின்! உயர் நீதிமன்ற ஆணைக்கு இடைக்கால தடை... சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

விஜய் தேவரகொண்டா, A23 என்கிற சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதா குற்றம்சாட்டப்பட்டிருக்கார். அவரோடு, ராணா டகுபதி (ஜங்லீ ரம்மி), பிரகாஷ் ராஜ் (ஜங்லீ ரம்மி), மஞ்சு லட்சுமி (யோலோ 247), நிதி அகர்வால் (ஜீட் வின்), பிரணீதா (ஃபேர் ப்ளே) ஆகியோரும் இந்த வழக்கில் சிக்கியிருக்காங்க.

ED, இவங்களுக்கு எவ்வளவு காசு விளம்பரத்துக்கு வந்துச்சு, எப்படி பணம் பரிமாற்றம் நடந்துச்சு, வரி விவரங்கள் என்னனு கேள்வி கேட்டு விசாரிக்குது. இந்த செயலிகள் மூலமா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்திருக்கறதா விசாரணையில் தெரியவந்திருக்கு.

விஜய் தேவரகொண்டா, “நான் விளம்பரப்படுத்தினது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஸ்கில்-பேஸ்டு கேமிங் ஆப் தான். சூதாட்டத்தை ஊக்கப்படுத்தல,”னு தன்னோட பங்குக்கு வாதாடியிருக்கார். பிரகாஷ் ராஜ், கடந்த ஜூலை 30-ல ஆஜராகி, “2016-ல ஒரு ஆப்புக்கு விளம்பரம் செஞ்சேன், ஆனா 2017-ல அதை நிறுத்திட்டேன்.

என் மனசாட்சி அதை ஏத்துக்கல,”னு சொல்லியிருக்கார். ராணா டகுபதியும், “2017-க்கு பிறகு எந்த ஆப்பையும் விளம்பரப்படுத்தல. எல்லாம் சட்டப்படி செஞ்சது தான்,”னு தெளிவுபடுத்தியிருக்கார். இவங்க எல்லாரும் தங்கள் விளம்பர ஒப்பந்தங்கள் சட்டப்படி சரியானவைனு வாதிடறாங்க.

ED, ராணா டகுபதிக்கு ஆகஸ்ட் 13-ல ஆஜராக சம்மன் அனுப்பியிருக்கு, மஞ்சு லட்சுமிக்கும் அதே தேதில ஆஜராக சொல்லியிருக்கு. இந்த விசாரணை, இந்த செயலிகள் பணமோசடி நெட்வொர்க்கோட பகுதியா இருக்கானு ஆராயுது. “இலவசமா பணம் சம்பாதிக்கலாம், நீங்களும் வெல்லலாம்”னு இளைஞர்களை ஈர்க்கற மாதிரி இந்த விளம்பரங்கள் இருந்ததா ED சொல்றது, இதனால நிறைய பேர் நிதி இழப்பை சந்திச்சிருக்காங்க.

இந்த விவகாரம், டோலிவுட்டோட பிரபலங்களுக்கு ஒரு எச்சரிக்கையா இருக்கு. மத்திய அரசு, சூதாட்ட செயலிகளை ஒழுங்குபடுத்த புது வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுவர வாய்ப்பிருக்குனு சொல்றாங்க. இந்த வழக்கு, இனி வர்ற நாட்கள்ல இன்னும் பெரிய திருப்பங்களை கொண்டுவரும்னு எதிர்பார்க்கப்படுது. 

இதையும் படிங்க: அமித் ஷா குறித்த அவதூறு பேச்சு!! ஜார்க்கண்ட் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share