ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்... வெளியானது சிக்கிய 2 பேரின் அதிர்ச்சி பின்னணி...!
தனியார் தங்கும் விடுதியில் இருந்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரித்திக் மற்றும் உதயசூரியன் என்ற அப்புக்குட்டி ஆகியோர் கைது
சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் காவல் துறையின் அனுமதியோடு முறைப்படி நடைபெற்றது. அப்போது மேடையின் வலது பக்கமாக அமர்ந்திருந்த மக்கள் மீது மாடியில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் குவாட்டர் மதுபாட்டிலை உடைத்து வீசினர். அது கூட்டத்தில் இருந்த 45 வயதுடைய கலைவாணி என்ற பெண்ணின் இடது கால் முட்டியின் மீது பட்டு தெறித்ததாக தகவல்கள் வெளியாகின. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதனால கோபமடைந்த வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா காவல் துறையினர் உடனடியாக கூட்டத்தில் மதுபாட்டில் வீசிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இங்கிருந்து யாரும் நகர மாட்டோம் என பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறைக்கு எங்களுடைய பணிவான வேண்டுகோள் எங்க கூட்டத்தில் இருக்கக்கூடிய பெண்மணிகள் உட்கார்ந்திருக்கக்கூடிய ஏரியாவில் கண்ணாடி பாட்டில் வைத்து அடித்துள்ளனர். தூள் தூளாக பாட்டில் உடைந்ததில் ஒரு பெண்மணி காயம் அடைந்துள்ளார். திமுகவுடைய இந்த சதி திட்டத்திற்கு நாங்கள் குரல் கொடுப்போம். காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதே இடத்தில் நாங்க உட்காருவோம், கிளம்ப மாட்டோம். மேலும் திருப்பி அடிச்சா தாங்க மாட்டோம் என ஆதவ் ஆவேசமாக பேசியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டை அடுத்து அருகே இருந்த தனியார் தங்கும் விடுதியில் இருந்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரித்திக் மற்றும் உதயசூரியன் என்ற அப்புக்குட்டி ஆகிய இருவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மது பாட்டில்களால் தாக்கி கொண்டபோது தவறுதலாக மதுபாட்டில் பொதுக்கூட்டத்தில் விழுந்ததாக காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். மேலும் உதயசூரியன் என்ற அப்புக்குட்டி அயனாபுரம் வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதாகவும் ரித்திக் மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்... புதுவையில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி..!! தொண்டர்கள் குஷி..!
இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தான் பாட்டில் வீசி இருக்கிறார்கள் என்றும் இருவரும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் அயனாவரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு பாதுகாப்பு இல்லை..! அமித் ஷாவுக்கு பறந்த கடிதம்..! தவெக கடும் குற்றச்சாட்டு..!!