போதை மிருகங்களால் துரத்தி துரத்திப் பாலியல் கொடுமை.. 14 வயது சிறுமி நேர்ந்த துயரம்... அதிமுக கொந்தளிப்பு..!!
திமுகவின் அலங்கோல ஆட்சியில் மக்கள் எப்படி வாழ முடியும் என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது .
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை உண்டாக்குகிறது. மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சுட்டிக்காட்டி அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 14 வயது சிறுமியின் கனவுகள் கொடூரமாக நசுக்கப்பட்டு உள்ளது என்று சாடியுள்ளது.
மதுராந்தகம் அருகே அத்திவாக்கம் பகுதியில் நள்ளிரவில் சிறுவனுடன் பைக்கில் சென்ற 14 வயது சிறுமியை மது போதையில் மிருகங்களைப் போல ஒரு கும்பல் துரத்தி, விபத்து ஏற்படுத்தி , கடத்தி, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதை படம்பிடித்து காட்டுகிறது என்றும் கூறியது.
பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படும் நிலை இருப்பதாகவும், தெருவில் நடக்கும் போது கூட பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது. இது தான் DMK-வின் "failure மாடல்" ஆட்சியின் உண்மை முகம் திமுக அரசு "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்று கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளது.
இதையும் படிங்க: கொலை இல்லங்க... உலோகவியல் சோதனை..!! முட்டுக்கொடுக்கும் திமுக... விளாசிய தவெக..!!
அப்பாவி சிறுமிகள் மிருகங்களால் வேட்டையாடப்படுகிறார்கள் என்றும் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், முழு கும்பலும் எங்கே என கேள்வி எழுப்பி உள்ளது. இந்த அலங்கோல ஆட்சி போதும் என்றும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு என எதுவும் இல்லாத தமிழகத்தில் எப்படி வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறது.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தை முதல் பல்விழுந்த பாட்டி வரை...!! ராட்சசன் ஸ்டாலின்... பாஜக விமர்சனம்..!!