“திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!
தவெக முக்கிய தலைகளுடன் இபிஎஸுக்கு நெருக்கமான முக்கிய நிர்வாகி ஒருவர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக அதிமுக - தவெக கூட்டணி தொடர்பாக பல்வேறு யுகங்கள் வெளியாகின. தவெக தலைவர் விஜய் அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள நிலையில், வாக்கு வங்கி விரிவாக்கத்திற்காக பெரிய கட்சியுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு குறித்து விவாதங்கள் எழுந்தன. அதே நேரத்தில், அதிமுகவிற்கும் இளைஞர் வாக்காளர்களை ஈர்க்கும் நோக்கில் தவெகவுடன் இணைவது சாதகமாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், இந்த கூட்டணிக்கு பல சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக, தலைமையின் நிலை, முதல்வர் வேட்பாளர் குறித்து நிலவிய தெளிவின்மை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் முக்கிய தடைகளாக மாறியது. மேலும், தனித்துவமான அரசியல் அடையாளத்தை உருவாக்க முயலும் தவெக, பெரிய கட்சியுடன் உடனடி கூட்டணியில் சேர்வதில் எச்சரிக்கையாக இருந்ததும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அமித் ஷாவே களமிறங்கி தவெகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க நினைத்தார். ஆனால் கொள்கை எதிரி என பாஜகவை சாடி வந்த விஜய் கூட்டணியில் சேர விரும்பவில்லை. மாறாக அதிமுகவுடன் மட்டும் நேரடியான கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன. அப்போது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் மிகப்பெரிய சிக்கல் நீடித்து வந்தது. அந்த சமயத்தில் பாஜகவும் அதிமுகவும் அதிகாரப்பூர்வ கூட்டணியையும் அமைத்தன. இதனால் பேச்சுவார்த்தை கிணற்றில் போட்ட கல்லாக மாறியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், விஜய்க்கு 40 தொகுதிகளும், துணை முதல்வர் பதவியும் தருவதாக கூறியதாகவும், இதில் எடப்பாடி பழனிசாமிக்கு உடன்பாடு இல்லாததால் கூட்டணி பேச்சுவார்த்தையை தவெக கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவதா? - எதிர்பாராத இடத்தில் இருந்து விஜய்க்கு வந்த எச்சரிக்கை...!
ஆனால் இப்போது நிலவரம் தலைகீழாக மாறியுள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே வாக்குப்பதிவு 85 சதவீதத்தை கடந்துள்ளது. இந்தச் சூழலில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரின் பிரதிநிதிகள் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக, தவெக இரண்டு பேரும் திமுகவை இந்த தேர்தலில் ஜெயிக்க விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதால், அந்த ஒற்றை புள்ளியில் ஒன்றிணைய சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விடச் சில இடங்கள் குறைவாகப் பெற்றால், தவெக-வின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தவெகவிற்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவையில் சில முக்கிய துறைகளை கொடுப்பதாக பேசியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜயின் அமைச்சரவை பட்டியல்... இல்லாத ஊருக்கு வழி..! சேகர்பாபு விமர்சனம்..!