அகமதாபாத் விமான விபத்து! விமானியில் திட்டமிட்ட சதி?! 260 பேரில் உயிரை குடித்த விபத்து குறித்து இத்தாலி பத்திரிகை தகவல்!
விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவறுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்து மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கொடூர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இத்தாலியின் பிரபல நாளிதழ் 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகளை (Cockpit Voice Recorder) அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆய்வு செய்தபோது, விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வால் விமானம் புறப்பட்ட 32 வினாடிகளுக்குள் இரண்டு என்ஜின்களுக்கான எரிபொருள் சுவிட்சுகளை கையால் அணைத்ததாக தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ரூ. 15,000 கோடி நஷ்டம்!! அகமதாபாத் விமான விபத்தால் தத்தளிக்கும் ஏர் இந்தியா! ஆண்டறிக்கையில் தகவல்!
இதனால் என்ஜின்கள் செயலிழந்து விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இது தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்ட செயல் என்று அறிக்கை கூறுகிறது. அமெரிக்க நிபுணர்கள், போயிங் 787 ரக விமானத்தில் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் தானாக செயலிழக்க வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகு கேப்டன் சபர்வால் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை கேப்டன் சபர்வாலின் குடும்பத்தினரும், இந்திய விமானிகள் சங்கங்களும் கடுமையாக மறுத்துள்ளனர். "இறந்த விமானியின் மீது பழி சுமத்தி போயிங் மற்றும் ஏர் இந்தியாவை காப்பாற்ற முயல்கின்றனர்" என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விபத்துக்குப் பிறகு மத்திய அரசு இது தொழில்நுட்பக் கோளாறு என்று கூறியது. கேப்டனின் 91 வயது தந்தை உச்ச நீதிமன்றத்தில் சுதந்திர விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது இத்தாலி ஊடக அறிக்கை புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. உண்மை என்ன என்பதை அதிகாரப்பூர்வ விசாரணை மட்டுமே உறுதிப்படுத்த முடியும். 260 உயிர்களை பறித்த இந்த விபத்தின் உண்மை காரணம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.
இதையும் படிங்க: ரூ. 15,000 கோடி நஷ்டம்!! அகமதாபாத் விமான விபத்தால் தத்தளிக்கும் ஏர் இந்தியா! ஆண்டறிக்கையில் தகவல்!