×
 

எரிபொருள் விலை தாறுமாறு உயர்வு..!! உயர்கிறதா விமானக் கட்டணம்..?? கலக்கத்தில் பயணிகள்..!!

எரிபொருள் விலை உயர்வால் விமானக் கட்டணங்களை நிறுவனங்கள் விரைவில் உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உலக அளவில் எரிபொருள் சந்தையை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ள நிலையில், இந்தியாவிலும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வந்தது.

இதன் விளைவாக, எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு முக்கிய அங்கமாக, இந்தியா முழுவதும் 20 சதவீதம் எத்தனால் கலந்த இ-20 பெட்ரோல் விற்பனையை ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எண்ணெய் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும். அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், இந்த பெட்ரோல் குறைந்தபட்சம் 95 ஆர்ஓஎன் (RON) தரத்துடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் வாகனங்களின் உமிழ்வு குறையும், உள்நாட்டு எத்தனால் பயன்பாடு அதிகரிக்கும், மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சேமிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தவெக நிர்வாகிகளும், விஜய்யும் பண்ணுறது சரியா? கட்டுக்கடங்காத கூட்டத்தால் மிரளும் போலீசார்!!

இதேவேளையில், அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. உள்நாட்டு விமானங்களுக்கான விமான எரிபொருள் விலை ஆயிரம் லிட்டருக்கு ரூ.96,638ல் இருந்து ரூ.2.07 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

சர்வதேச விமானங்களுக்கான விலையும் ஆயிரம் லிட்டருக்கு ரூ.76,311ல் இருந்து ரூ.1.58 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 114 சதவீதம் அதிகமாகும். இது இந்தியாவின் பிரதான விமான நிலையங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பதிவாகியுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக விமான நிறுவனங்கள் விரைவில் பயணக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சில நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணம் (ஃப்யூல் சர்சார்ஜ்) அறிவித்துள்ளன. இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்களின் செலவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. விமான நிறுவனங்கள் இயக்கச் செலவில் சுமார் 40 சதவீதம் எரிபொருள் செலவாகும் நிலையில், இந்த உயர்வு அவற்றின் நிதி நிலையை பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், உலக சந்தை ஏற்ற இறக்கங்கள் இந்திய பொருளாதாரத்தின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. இந்த நடவடிக்கைகள் நீண்டகாலத்தில் இந்தியாவின் எரிசக்தி சுயசார்பை வலுப்படுத்தும் என்றாலும், உடனடி சவால்களை சமாளிப்பது அரசுக்கும் பொதுமக்களுக்கும் முக்கியமானதாக உள்ளது. 

இதையும் படிங்க: “உனக்கே உன் மேல நம்பிக்கை இல்ல...” - விஜயை வெளுத்து வாங்கிய சீமான்... அண்ணாமலை, இபிஎஸுக்கும் அதிரடி ரிப்ளே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share