டெல்லியை உலுக்கும் போராட்டம்... வரலாறு காணாத சர்ச்சை... அமித்ஷா - தர்மேந்திர பிரதான் சந்திப்பு.!!
டெல்லியில் வரலாறு காணாத வகையில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தர்மேந்திர பிரதான் சந்தித்தார்.
டெல்லியில் வரலாறு காணாத வகையில் போராட்டம் வெடித்துள்ளது. நீட் நுழைவு தேர்வு என்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. நீட் நுழைவு தேர்வால் இறந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் வெடித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை வரலாறு கண்டிராத போராட்டத்தை நடத்தி டெல்லியில் இளையோர் அதிர செய்துள்ளனர். இந்தக் கடும் போராட்டத்தால் அசம்பாவிதங்களை தவிர்க்க நாடாளுமன்ற வாயில்களை மூடியுள்ளனர். உச்சகட்ட பதற்றம் நிலவுவதால் துணைய ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளன.
மேலும் குடியரசு தலைவர் மாளிகை செல்லும் சாலையையும் முழுவதுமாக மூடி இருக்கின்றனர். நீட் தேர்வாள் இறந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆகணும் - மல்லிகார்ஜுன கார்கே!!
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துள்ளார். டெல்லியில் கடுமையான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தர்மேந்திர பிரதான் இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளார். அவர் பதவி விலகுவார் என கூறப்படும் நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் படையின் போராட்டம் டெல்லியை உலுக்கியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!