வண்டியில உட்காந்துக்கிட்டு கை காட்டுறது இல்ல அரசியல்! விஜயை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!
'அரசியல் என்பது ஒரு வண்டியின் மேல உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை' என சில தினங்களுக்கு முன் காரைக்குடியில் பிரசாரத்தில் பேசாமல் சென்ற விஜயை பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, த.வெ.க. தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். “வண்டியின் மேல் உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை” என்று சாடிய அண்ணாமலை, உண்மையான அரசியல் மக்களுடன் இருந்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் என்று வலியுறுத்தினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “ஒரு எம்.எல்.ஏ. எப்படி இருக்க வேண்டும் என்றால், மக்கள் சொல்லும் பிரச்சினைகளை கேட்க வேண்டும். அதைத் தீர்க்க எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும். ஆனால் இங்கே ஒரு குடும்பம் மொத்த காரைக்குடியையும் பிடித்து வைத்திருக்கிறது.
சிதம்பரம் குடும்பத்தினர் காரைக்குடி மற்றும் சிவகங்கைக்கு என்ன செய்திருக்கிறார்கள்? கடந்த 15 ஆண்டுகளாக ஒரே ஒரு வங்கியின் 4 ஏடிஎம் திறந்ததை மட்டுமே பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காரைக்குடி அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்ல வேண்டும். அதற்கு மக்கள் சரியான முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: அய்யோ அவரு வர்றாரா? ஆள விடுங்க! பழனிசாமியை பார்த்ததும் எஸ்கேப் ஆன உதயநிதி!!
அண்ணாமலை மேலும் பேசுகையில், “இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் காரைக்குடியில் ரோடு ஷோ நடந்தது. வண்டியின் மேல் உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை. வெயிலில் மக்கள் எப்படி நிற்கிறார்களோ, அவர்களுடன் நின்று பேச வேண்டும்.
காமராஜர் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அதே அளவு காலம் சிறையிலும் இருந்தார். கஷ்டத்தைப் பார்த்தவர். இன்றைக்கு வரும் அரசியல்வாதிகளை நான் தவறாகச் சொல்லவில்லை. ஆனால் உண்மையான அரசியல் என்பது மக்களுடன் இருப்பதுதான்” என்று விஜயை மறைமுகமாக சாடினார்.
இளைஞர்களிடம் உரையாடிய அண்ணாமலை, “இந்தத் தேர்தலில் 18 வயது முதல் 29 வயது வரை ஒரு கோடியே 28 லட்சம் இளைஞர்கள் வாக்களிக்க உள்ளனர். இது தேர்தல் வரலாற்றில் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ள தேர்தல். மாற்றம் உங்களுக்காகத்தான். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கடந்த தேர்தல் அறிக்கையின் கட், காப்பி, பேஸ்ட் மட்டுமே” என்று குறிப்பிட்டார்.
அண்ணாமலையின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. விஜய் சமீபத்தில் காரைக்குடியில் பிரசாரம் செய்யாமல் சென்றதை சுட்டிக்காட்டி அண்ணாமலை பேசியது, த.வெ.க. வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், அரசியல் தலைவர்களின் இத்தகைய தாக்குதல் பேச்சுகள் பிரசாரத்தின் தீவிரத்தை அதிகரித்துள்ளன. அண்ணாமலை தொடர்ந்து இளைஞர்களை மாற்றத்துக்காக அழைப்பு விடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: வானதிக்கு தீவிர சிகிச்சை!! மேலும் 4 நாட்கள் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்ய மருத்துவர்கள் அட்வைஸ்!