×
 

வேலை போச்சு..! வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்த நபரை கைது செய்த போலீஸ்..!!

கஞ்சாவால் வேலை இழந்து பிறகு வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஐதராபாத்தில் கஞ்சாவுக்கு அடிமையான சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை இழந்த பிறகு வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்த நபரை போலீசார் கைது செய்தனர். இவர் தனது வீட்டில் 17 கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை போலீசார் அறிந்ததை அடுத்து அதனை பறிமுதல் செய்துள்ளனர்.

கஞ்சா பழக்கத்தால் வேலை இழந்து, பிறகு கஞ்சாவை தனது வீட்டிலேயே வளர்த்து தற்போது இளைஞர் ஒருவர் கைதாகி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நாச்சாரம் கிழக்கு காந்திநகரைச் சேர்ந்த சி.எச். சசிதர் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த பணியின் போது ஏற்பட்ட அறிமுகமான நண்பர்கள் மூலம் கஞ்சாவுக்கு சசிதர் அடிமையானதாக தெரிகிறது. பணி நேரத்தில் கஞ்சா பயன்படுத்தி வந்ததால் அவர் தனது சம்பளம் முழுவதையும் அதற்காகச் செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. கஞ்சாவுக்கு அடிமையாகி பணியின் போது கவனம் செலுத்தாமல் இருந்ததால் அந்த நிறுவனம் பணியில் இருந்து நீக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

இதனால் பணமில்லாத சசிதர் பணத்திற்காகவும் தனது சொந்த தேவைக்காக வீட்டின் மாடியில் கஞ்சா பயிரிடத் தொடங்கி இருக்கிறார். இவரது சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தகவல் அறிந்த கலால் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று மாடியில் வளர்க்கப்பட்ட 17 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா பயிரிட்ட சசிதரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: சிங்கப்பூர் டூ திருச்சி!! ஜனநாயக கடமையாற்ற பறந்து வரும் தமிழர்கள்!! விமானம் ஹவுஸ்புல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share