அசாமில் துயரம்! பிரம்மபுத்திராவில் படகு கவிழ்ந்து விபத்து.. துரிதகதியில் நடக்கும் மீட்பு பணிகள்!
பிரம்மபுத்திரா நதியில் நாட்டுப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
நல்பாரி மாவட்டத்தின் வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா நதி பாய்கிறது. இந்த நதி விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் போக்குவரத்துக்கு முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனை உள்ளூர் மக்கள் மீன்பிடித்தல் மற்றும் சிறிய அளவிலான நீர் வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அசாமின் நல்பாரி மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியில் நாட்டுப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நல்பாரி மாவட்டத்தில் உள்ள முகல்முவா பகுதிக்கு அருகில் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உசுரு தப்பாது! அயதுல்லா காமெனிக்கு சாவு மணி! இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்!
படகில் பயணித்தவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக பேசிய நல்பாரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுப்ரியா தாஸ், படகு கவிழ்ந்த சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் உட்பட மூன்று பேர் காணவில்லை என்று கூறினார்.
NDRF, SDRF குழுக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கள் விஷம்; உணவல்ல... சீமானை கைது பண்ணுங்க... கிருஷ்ணசாமி அதிரடி!!