×
 

வங்கதேச கலவரத்தின் முக்கிய புள்ளிக்கு இந்தியாவில் வாக்கு! மேற்கு வங்கத்தில் மெகா மோசடி அம்பலம்..!

வங்கதேசத்தில், ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் முக்கியமானவரான நியூட்டன் தாஸ் என்பவரின் பெயர், மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

2024ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம், அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தையே உலுக்கியது. அரசு பணிகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய இட ஒதுக்கீட்டை எதிர்த்து தான் இந்த வன்முறை அரங்கேறியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் பாகிஸ்தானின் லக்சர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருப்பதாக அவர்களே ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் வங்கதேச போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரின் பெயர், மேற்கு வங்க மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த போராட்டக்காரரின் பெயர், காக்திப் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளது. இந்த தொகுதி, தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ளது. அவரின் பெயர் நியுட்டன் தாஸ். இவர் 2024ம் ஆண்டு வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் மையப்புள்ளியாக இருந்தவர்.

இதையும் படிங்க: மம்தா பானர்ஜி அரசுக்கு இருக்கு வேட்டு! மோடி ஆட்சியில இதுக்கெல்லாம் இடமே இல்லை.. அமித்ஷா சரவெடி..!

அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு ஓட இந்த போராட்டமே முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் தமக்கு ஓட்டுரிமை உள்ளது குறித்து நியுட்டன் தாஸ் வீடியோ வழியாக ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், 2024ம் ஆண்டு எனது மூதாதையர்களின் சொத்து விவகாரம் தொடர்பாக வங்கதேசம் சென்றேன். எதிர்பாராதவிதமாக மாணவர்கள் போராட்டத்தில் சிக்கிக் கொண்டேன். காக்திப் தொகுதியில் 2014ம் ஆண்டு முதல் வாக்காளராக இருக்கிறேன்.

2017ம் ஆண்டு எனது வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போய்விட்டது. உள்ளூர் திரிணமுல் கட்சி எம்.எல்.ஏ., உதவியுடன் புதிய வாக்காளர் அட்டையை பெற்றுவிட்டேன். 2016ம் ஆண்டு மேற்கு வங்க தேர்தலின் போது ஓட்டும் போட்டுள்ளேன் என அவர் கூறினார். 

இந்த பிரச்னைக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று பாஜ குற்றம் சாட்டியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பேரை, மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் சேர்த்துள்ளதற்கு இந்த சம்பவமே சாட்சி என அம்மாநில பாஜ தலைவர் சுகந்த மஜூம்தார் கூறினார். குறிப்பிட்ட அந்த நபருக்கு இரு நாடுகளிலும், ஓட்டுரிமை இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த பலர், இங்கு வாக்காளர் பட்டியலில் திரிணமுல் கட்சியினரால் சேர்க்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய நிர்வாகியான அன்சருல்லா பங்ளாவின் பெயர் முர்ஷிதாபாத் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என பா.ஜ மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி கூறினார். குற்றச்சாட்டுகளை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மறுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மோதி பார்த்துக்கலாம் வர்றீங்களா? நேரலை டிவி விவாதத்திற்கு மோடியை அழைக்கும் மம்தா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share