×
 

மீண்டும் நிதீஷ் ஆட்சி..! 10வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்பு...!

பீகாரின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார்.

பீகாரின் அரசியல் வரலாற்றில் 2025 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியத்துவமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், 243 தொகுதிகளுக்கான வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்பட்டன. 7.45 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்தல், 1951 முதல் பீகாரின் அதிக வாக்காளர் பங்கேட்பை (67.13%) பதிவு செய்தது.

ஆனால், இந்த உற்சாகமான பங்கேட்புக்கு மாறாக, காங்கிரஸ் கட்சி தனது எதிர்பார்ப்புகளைத் தாண்டி பெரும் பின்னடைவை சந்தித்தது. 2020 தேர்தலில் 19 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், இம்முறை வெறும் 2 முதல் 7 இடங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது, இது கட்சியின் அரசியல் செல்வாக்கின் சரிவை வெளிப்படுத்துகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார். பீகாரின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வரலாற்று வெற்றி என்பது நரேந்திர மோடி மற்றும் நிதீஷ் குமார் அரசாங்கங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களின் மீதான நம்பிக்கையின் முத்திரை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பீகாரில் NDA வெற்றிக்கு இது தான் காரணம்... ஜன் சுராஜ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு..!

இந்த நிலையில், பீகாரின் முதலமைச்சராக 10வது முறையாக நவம்பர் 20ம் தேதி நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார். பெரும்பான்மையை நிரூபித்து உள்ளதால் அமைச்சரவையில் அதிக இடங்களை பாஜக பெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பாட்னாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி முதலமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

இதையும் படிங்க: மக்கள் முடிவை ஏற்கிறோம்... ஆனால்..! காங்கிரஸ் கட்சி கொடுத்த நம்பிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share