×
 

மதம் மாறினால் பட்டியலின அந்தஸ்து பறிபோகும்! SC,ST கிடையாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

'ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்த மதத்தை தவிர, பிற மதத்துக்கு மாறியவர்கள் பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழப்பர்' என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லி: பட்டியலின சாதியினராக பிறந்தவர்கள் ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்த மதத்தைத் தவிர வேறு எந்த மதத்துக்கு மாறினாலும், அவர்களது பட்டியலின அந்தஸ்து உடனடியாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த அதிரடி உத்தரவு நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சின்தடா ஆனந்த் என்பவர் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறி, போதகராகப் பணியாற்றி வருகிறார். அவர் ஒரு சம்பவத்தில் ஜாதி ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறி, ராமிரெட்டி என்பவர் மீது எஸ்.சி.,-எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், “கிறிஸ்துவ மதத்துக்கு மாறியதால் ஆனந்த் பட்டியலின அந்தஸ்தை இழந்துவிட்டார். எனவே அவர் எஸ்.சி.,-எஸ்.டி., சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க: மாம்பழ சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கு... அன்புமணிக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

இந்த உத்தரவை எதிர்த்து ஆனந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு நேற்று இந்த மனுவை விசாரித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், முக்கியமான விளக்கத்தை அளித்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: “1950ஆம் ஆண்டு பட்டியலின வகுப்பு தொடர்பான அரசியல் சாசன உத்தரவின்படி, ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே பட்டியலின அந்தஸ்தைப் பெற முடியும். வேறு எந்த மதத்துக்கு மாறினாலும், அந்த நபர் தனது பிறப்பால் பெற்ற பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழக்கிறார். ஒரே நேரத்தில் பிற மதத்தைப் பின்பற்றுவதோடு, பட்டியலின சலுகைகளையும் கோர முடியாது.”

இந்த தீர்ப்பு காரணமாக, கிறிஸ்துவராக மாறிய சின்தடா ஆனந்த் எஸ்.சி.,-எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், பட்டியலின அந்தஸ்து ரத்தானதால், அரசியல் சாசனத்தின் கீழ் வழங்கப்படும் எந்த சலுகையையும் அவர் பெற முடியாது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலின சமூகத்தினர் மத்தியில் கலக்கமும், சில அரசியல் கட்சிகளிடையே விவாதமும் எழுந்துள்ளது. சிலர் இந்த தீர்ப்பை வரவேற்கும் நிலையில், மற்றவர்கள் இது அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரானது என்று விமர்சித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தெளிவான நிலைப்பாடு, மதமாற்றம் தொடர்பான பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டியலின சலுகைகளைப் பெற விரும்புபவர்கள் ஹிந்து, சீக்கிய அல்லது பவுத்த மதத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இனி சட்டபூர்வமான உண்மையாகிவிட்டது.

இதையும் படிங்க: அம்மாடியோவ்! 29 கிலோ தங்கம்! 200 கிலோ வெள்ளி!! ரூ.600 கோடிக்கு சொத்து! மலைக்க வைக்கும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share