×
 

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

டெல்லியில் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டெல்லியில் இன்று நடந்த 50வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம், தமிழ்நாடு உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆணையம், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி நதி நீரை பங்கீடு செய்வதற்கும், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். பல ஆண்டுகளாகத் தொடரும் காவிரி நீர் பிரச்னையில், ஒவ்வொரு கூட்டமும் தமிழ்நாட்டின் நீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

இதன் தலைவராக எஸ்.கே. ஹல்தார் போன்ற அதிகாரிகள் பொறுப்பேற்று வருகின்றனர். இந்த ஆணையத்தின் கூட்டங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத் துறை அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். பொதுவாக நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ நடைபெறும் இந்தக் கூட்டங்கள், டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் அல்லது மத்திய அரசின் வளாகத்தில் நடைபெறுவது வழக்கம்.

இதுவரை 49 கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், 50வது கூட்டம் இன்று டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டது. முந்தைய கூட்டங்களைப் போலவே, இந்தக் கூட்டத்திலும் காவிரி நதியின் நீர் வரத்து, அணைகளின் நீர் இருப்பு, மழைப்பொழிவு நிலவரம், மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடந்த ஐம்பதாவது கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! ஒத்தி வைக்கணும்..! TTV தினகரன் வலியுறுத்தல்..!

குறிப்பாக, தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி போன்ற பயிர்களுக்கு தேவையான நீர் விடுவிப்பு, கர்நாடகாவின் அணைகளில் இருந்து திறக்க வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மே மாத கணக்கீட்டின்படி 2.5 பி எம் சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! இப்போதைக்கு நடத்தக்கூடாது..! சீமான் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share