×
 

மக்களை தூண்டி விடும் கன்டென்ட்டுகள்... பாக். பிரதமரின் யூடியூப் சேனலுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு!!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலை மத்திய அரசு இந்தியாவில் முடக்கியுள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக பாகிஸ்தான் பிரபலங்களில் யூடியூப் சேனல்களை முடக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்குள் இந்தியாவின் ரகசிய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்... வழிகாட்டும் அமெரிக்கா..!

அதன்படி இன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனல் நம் நாட்டில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது அவரது யூடியூப் பக்கத்தை கிளிக் செய்து பார்த்தால், தேச பாதுகாப்பு கருதி அரசு உத்தரவின் அடிப்படையில் இந்த சேனலில் உள்ள கண்டென்ட் என்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வருகிறது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களை முதற்கட்டமாக மத்திய அரசு முடக்கியது.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் என்பது அதிகரித்து வரும் நிலையில் தவறான தகவல்களை அழித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த 16 யூடியூப் சேனல்கள் முடக்கம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூல் சேனல் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது நம் நாட்டுக்கு எதிராகவும், மக்களை தூண்டி விடும் வகையிலான கன்டென்ட்டுகளை இந்த சேனல்களில் பதிவேற்றம் செய்வதன் காரணமாக மத்திய அரசு நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவிற்குள் 'ஆப்பிள்' நிறுவனத்தை தடுக்கவே பஹல்காம் தாக்குதல்... பாகிஸ்தானை ஏவிய சீனா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share