×
 

முதல்வர் vs ஆளுநர் இடையே முற்றும் மோதல் - புதுச்சேரியில் நடப்பது என்ன?

அமைச்சர்களுக்கு இதுவரை இலாக்காக்கள் ஒதுக்கப்படாததால் நிர்வாகப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையேயான அதிகார மோதல் காரணமாக மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, அமைச்சர்களுக்கு இதுவரை இலாக்காக்கள் ஒதுக்கப்படாததால் நிர்வாகப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், லட்சிய ஜனநாயகக் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, மே 13-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதையும் படிங்க: President's Police Colour Award..! தேசிய அங்கீகாரம்! புதுவைக்கு வருகை தரும் அமித்ஷா..!!

அதனைத் தொடர்ந்து மே 18-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த அன்பழகன் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார். பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஜூன் 17-ஆம் தேதி மேலும் மூன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.

பொதுவாக புதுச்சேரியில் அமைச்சரவை அமைந்த உடனேயே அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை சுமார் 69 நாட்கள் கடந்தும் இலாக்கா ஒதுக்கப்படவில்லை.

இதற்கிடையில், மத்திய பாஜக தலைமையின் பொறுப்பாளர்கள் முதலமைச்சருடன் பலமுறை ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், கடந்த 20-ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்களுக்கான இலாக்கா பட்டியலை துணைநிலை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.

எனினும், பல நாட்கள் கடந்தும் அந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில், துணைநிலை ஆளுநரிடம் பட்டியல் வழங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஒப்புதல் கிடைப்பது வழக்கமாக இருந்தது.

இந்த முறை, பாஜக விரும்பிய முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படாததே தாமதத்திற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, முந்தைய ஆட்சியில் நமச்சிவாயம் வகித்த உள்துறை, தொழில்துறை, கல்வித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் இந்த முறை வழங்கப்படவில்லை என்பதும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "NO FLY ZONE" விதிகளை மீறிய CM விஜய்..? சட்ட நடவடிக்கை எடுக்கணும்... அதிமுக வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share