பெரும் போருக்கு பெரம்பலூர் ரெடியா? - தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியை மாற்றிய மு.க.ஸ்டாலின்...!
வடக்குடன் போர் செய்வது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என மு.க.ஸ்டாலின் பேசியது, தமிழக அரசியல் சூழலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெரம்பலூரில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வடக்குடன் போர் செய்வது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என மு.க.ஸ்டாலின் பேசியது, தமிழக அரசியல் சூழலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
2006ஆம் ஆண்டு கலர் டிவியை கலைஞர் வழங்கினார். 2021ஆம் ஆண்டு மகளிர் உரிமைத் தொகையை நாங்கள் வழங்கினோம். இப்போது 2026ஆம் ஆண்டு, “இல்லத்தரசி திட்டம்” மூலம் பெண்களே, நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். இந்த அறிவிப்பின் மூலம் நமது எதிரிகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டனர்.
இல்லத்தரசி திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகைக்கு கூப்பன் வழங்கப் போகிறோம் தெரியுமா?. 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்பட உள்ளது.
இந்த கூப்பனை பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்கலாம் அல்லது பழைய பொருட்களை மாற்றி (exchange) புதியவற்றை வாங்கிக்கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான கடையில் வாங்கலாம். உங்களுக்கு பிடித்த நிறுவனத்தின் பொருட்களைத் தேர்வு செய்யலாம்.
இதையும் படிங்க: நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!
எந்தெந்த பொருட்கள் வாங்கலாம் தெரியுமா? வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், டிவி, கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோவேவன், இன்டக்ஷன் போன்ற பல பொருட்களை வாங்கலாம். இதைக் கேட்டு பெண்கள் ஏற்கனவே விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். “எங்கே வாங்கலாம்? எப்போது வாங்கலாம்?” என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பொருட்களை வாங்கும் போது, வீட்டில் யாரிடமும் கேட்க வேண்டாம். கேட்டால் குழப்பம் ஏற்படலாம், தேவையற்ற பிரச்சனைகள் வரலாம். ஏதேனும் பிரச்சனை இருந்தால், என்னிடம் சொல்லுங்கள். நான் உங்களுக்காக இருக்கிறேன்; அதை நான் பார்த்துக்கொள்கிறேன். இந்த திட்டம் முழுவதும் உங்களுக்காக கொண்டு வரப்பட்டது. நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த வாக்குறுதி இடைவிடாமல் உழைக்கும் என் சகோதரிகள், தாய்மார்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்.
அதற்காகவே “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” கொண்டு வரப்பட்டது.
திராவிட மாடல் 2.0 ஆட்சியில், இனி மாதம் ரூ.1000 அல்ல, ரூ.2000 வழங்கப்படும். இதை கேட்டதும் பெண்கள் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
என்ன கணக்கு தெரியுமா?. பொங்கலுக்கு முன்பு ரூ.3000,பிப்ரவரியில் சொல்லாமல் ரூ.5000,அடுத்து இல்லத்தரசி கூப்பனில் 8000 ரூபாய் இவ்வாறு மொத்தமாக கணக்கிட்டு பார்க்கிறார்கள்.
“கொடுத்ததெல்லாம் கொடுத்தார்” என்ற பாடல் போல, அவர் யாருக்காக கொடுக்கிறார் தெரியுமா? உங்களுக்காகத்தான். தமிழ்நாட்டின் அனைத்து பெண்களுக்கும் வழங்குகிறோம். அதனால் சகோதரிகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: டெல்லிக்கு ஷாக்... சொன்ன படியே அதிரடி காட்டிய ஸ்டாலின்... கருப்பு உடையில் மசோதா நகலை எரித்து மாஸ்...!