×
 

தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் மத்திய அரசின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் 'தொகுதி மறுவரையறை மசோதா' (Delimitation Bill) விவகாரத்தில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அனைத்துத் தரப்பினரும் விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம் என்று காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு அனுப்பியுள்ள இந்த புதிய கடிதத்தில், மத்திய அரசின் அலட்சியப் போக்கு குறித்து கார்கே அதிருப்தி வெளியிட்டுள்ளார். தொகுதி மறுவரையறை போன்ற நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதிக்கும் மிக முக்கியமான விவகாரத்தில், மத்திய அரசின் முன்மொழிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலோசிப்பது ஜனநாயகக் கடமையாகும். இது தொடர்பாக ஏற்கனவே கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நான் பிரதமருக்குக் கடிதங்கள் எழுதியிருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எனது கோரிக்கைகள் எதுவும் இதுவரை ஏற்கப்படவில்லை; மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

2026-க்குப் பிறகு மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது, குறிப்பாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா) நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வட மாநிலங்களின் இடங்களை அதிகரிக்கும் என்ற பலத்த அச்சம் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில அரசுகள் மத்தியில் நிலவி வருகிறது.

இத்தகைய சூழலில், ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்காமல், அனைத்து மாநிலங்களின் மற்றும் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்பதை வலியுறுத்தியே காங்கிரஸ் தலைவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share