ஆட்டம் காட்டும் கொரோனா.. 6 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. மக்களே உஷார்..!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டையே புரட்டி போட்ட கோவிட்-19 பல உயிர்களை காவு வாங்கியது. லட்சக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். முழு ஊரடங்கு இதுவரை கண்டிடாத அளவு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு வழியாக கோவில் 19 தடுப்பூசி உருவாக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக கொரோனா அலை ஓய்ந்தது.
இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு வீரியம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கோவிட்-19 புதிய தொற்றுநோய் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... அச்சம் காட்டும் கொரோனா... ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கையுடன் தயாரானது தனி வார்டு!
இந்த நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 391 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமா?... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!