×
 

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! மரண தண்டனை விதித்தது புனே கோர்ட்! 55 நாட்களில் அதிரடி தீர்ப்பு!

புனேயில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம், 3 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்ற நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 3 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றம் நடந்த 55 நாட்களுக்குள் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியானது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த மே 1-ஆம் தேதி புனே மாவட்டத்தில் 3 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக 65 வயதான பீம்ராவ் காம்ப்ளே கைது செய்யப்பட்டார். குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அரசு சிறப்பு அரசு வழக்கறிஞராக அஜய் மிசாரை நியமித்தது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, வெறும் 15 நாட்களிலேயே 82 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க: “நள்ளிரவில் ஆபாச SMS’’... அம்பலமான கல்லூரி வார்டனின் லீலைகள்... மாணவிகளை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன கல்லூரி நிர்வாகம்...!

வழக்கை விசாரித்த புனே சிறப்பு போக்சோ நீதிமன்றம், அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த பிறகு குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும், இந்த சம்பவம் "அரிதிலும் அரிதான" வகை குற்றமாக கருதப்படுவதால், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விபுல் துஷிங் கூறுகையில், குற்றத்தின் கொடூர தன்மை, ஆதாரங்களின் வலிமை மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தையின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் மிகக் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக நீதித்துறை கடுமையான அணுகுமுறையை எடுத்திருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க சட்ட அமலாக்க அமைப்புகள் மேலும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

இதையும் படிங்க: உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு? வண்ண குறியீடுகள் ஏன்? தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share