×
 

வாழ்த்துங்க தலைவரே! பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன்..!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்துள்ளது.

 சி.பி. ராதாகிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது அரசியல் பயணம் மிக நீண்டதும், பல்வேறு பொறுப்புகளை உள்ளடக்கியதுமாகும். 16 வயதிலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கிய இவர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் ஜன சங்கத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அவசரநிலைக் காலத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தியவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

முதலில் ஜனதா கட்சியில் பணியாற்றிய இவர், பின்னர் பாஜகவில் இணைந்து பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பதவி வகித்தார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில், திமுக மற்றும் அதிமுகவின் ஆதரவின்றி தனித்து போட்டியிட்டு 3.8 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்தார். இது கோவை மக்களிடையே அவருக்கு இருந்த ஆதரவை எடுத்துக்காட்டியது. சி.பி. ராதா கிருஷ்ணன் 1990 முதல் 1995 மற்றும் 2001 முதல் 2006 வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். 2014 இல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய கயிறு தலைவராக நியமிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: வரலாறு பேசட்டும்! சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுங்கள்.. இந்தியா கூட்டணிக்கு நயினார் வேண்டுகோள்..!

தற்போது துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பாஜக கூட்டணி கட்சியினர் ஆதரவு திரட்டி வருகின்றன. இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். பிரதமரை நேரில் சந்தித்த அவர், தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துக்களை பெற்றார். 

இதையும் படிங்க: இந்த தீபாவளிக்கு டபுள் போனஸ்!! பிரதமர் மோடி சொன்ன குட்நியூஸ்!! உற்சாகத்தில் உற்பத்தியாளர்கள்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share