×
 

அடப்பாவமே..! நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு..! அசால்டாக அபேஸ் செய்த சிசிடிவி காட்சி..!!

மத்திய பிரதேசத்தில் நீதிபதி வீட்டிலேயே நான்கு சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவே வருகிறது. இதனிடையே நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபால் நகரில் சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாட்டின் தாக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது.

இரவு சுமார் 12:30 மணியளவில், மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் நீதிபதியின் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் படிக்கட்டுகளுக்குக் கீழே பார்க்கிங் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நான்கு காலி சிலிண்டர்களை அவர்கள் எளிதாக எடுத்துச் சென்றனர். இந்த முழு சம்பவமும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

காலையில் சுமார் 9 மணியளவில் சிலிண்டர்கள் இல்லாதது தெரியவந்ததும், வீட்டு உரிமையாளரான வழக்கறிஞர் ராபின் ஜெயின் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார். ராபின் ஜெயின் போபால் நீதிமன்றத்தில் பயிற்சி பெறும் வழக்கறிஞர் ஆவார். அவரது தந்தை விமல் குமார் ஜெயின் மறைந்த முன்னாள் மாவட்ட நீதிபதி ஆவார். திருடப்பட்ட சிலிண்டர்களில் ஒன்று பாரத் கேஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது,

இதையும் படிங்க: மக்களே பயப்படாதீங்க..!! கேஸ் சிலிண்டர் சப்ளையில் தடை இருக்காது..!! மத்திய அரசு உறுதி..!!

மற்ற மூன்று இண்டேன் நிறுவனத்தைச் சேர்ந்தவை. அனைத்தும் காலியாக இருந்ததால், அவற்றின் மதிப்பு சுமார் 6,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோஹே-ஃபிஜா (Kohefiza) போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிலிண்டர்கள் திருடி செல்லப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஒருவேளை பதுக்கி வச்சியிருப்பாரோ?... நயினார் நாகேந்திரனை பங்கமாய் கலாய்த்த அமைச்சர் ரகுபதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share