குறைந்த காற்று மாசுபாடு.. தரம் உயர்ந்த தலைநகர் டெல்லி!
தலைநகர் டெல்லியில் மூன்று ஆண்டுகளில் முதன் முறையாக ஜனவரி மார்ச் காலகட்டத்தில் காற்றின் தரக்குறியீடு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் காசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் தலைநகர் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு கணக்கிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று தலைநகர் டெல்லியில் வெப்பம் குறைந்து இருந்த நிலையில் காற்றின் தரம் திருப்திகரமான பிரிவின்கீழ் நீடித்தது. காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தகவலின் படி காற்றின் தர குறியீடு 89 ஆக இருந்தது.
பொதுவாக காற்றின் தரக் குறியீடு அளவுகள் ஆறு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. முதலில் 0-50 என இருந்தால் அது நல்ல தன்மையுடன் இருப்பது என்றும், 51-100 திருப்திகரமானது என்றும், 101-200 மிதமானது என்றும், 201-300 மோசம் என்றும், 301-400 என இருந்தால் மிக மோசமான தன்மையை கொண்டது என்றும், 401-500 எனை இருந்தால் கடுமையான காற்று மாசுபாட்டை கொண்டுள்ளதாகவும் வகைப்படுத்தப்படுகின்றன..
இதையும் படிங்க: பி.எல்.ஏ-வின் கொடூரத்தனம்… இரண்டாக உடையும் பாகிஸ்தான்… உறுதிப்படுத்திய எம்.பி-யின் பேச்சு
அந்த வகையில் அந்த வகையில் தற்போது தலைநகர் டெல்லியில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக அறிவித்த காற்றின் கட்டுப்பாட்டு மேலாண்மை வாரியம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை ஒப்பீடுகையில் காற்றின் தரம் மிகவும் தூய்மையாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.மேலும் இதே நிலையை நீடிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மின்சார வாகனத்தில் பற்றி எரிந்த தீ.. குழந்தை உட்பட மூவர் படுகாயம்..!