டெல்லி உணவகத்தில் பயங்கர தீவிபத்து... பதைப்பதைக்கும் சம்பவம்... பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..!!
டெல்லியில் உள்ள மாளவியா நகரில் செயல்பட்டு வந்த உணவகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மாளவியா நகர் பகுதியில் இன்று காலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து நகரம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Lemon Green என்ற உணவகத்தில் ஏற்பட்ட இந்த தீயில் கருகி முன்னர் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் டெல்லியில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. காலை சுமார் 9:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்பு சேவை தெரிவித்தது. உடனடியாக பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
மூன்று மாடி கட்டிடத்தில் இயங்கிய இந்த உணவகத்தின் அடித்தளத்தில் சிக்கியிருந்த மூன்று பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஏராளமானோர் மீட்கப்பட்டு CATS அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ மிக வேகமாக பரவியதால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக கூறப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து இருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், ஆனால் தேடுதல் பணிகள் தொடர்ந்து வருகின்றன. மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி ஜிதேந்திர குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி நிவாரணத் தொகையை அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களை சீரழித்த கஞ்சா கும்பல் கைது..! காயிலாங்கடையில் பதுக்கிய 18 கிலோ கஞ்சா பறிமுதல்..!