இனி இந்த பரிசோதனை பண்ணாம பிரதமரை சந்திக்க முடியாது... வெளியானது அதிரடி அறிவிப்பு!!
பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள டெல்லி நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. சென்னையில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் கொரோனா குறித்த அச்சம் பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. தென் மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆக்சிஜன், படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிததாக 306 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் 3 பேரும், கர்நாடகாவில் 2 பேரும், மகாராஷ்டிராவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அங்கு புதிததாக 170 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் புதிதாக 114 பேரும், கர்நாடகாவில் புதிதாக 100 பேரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மொத்தமாக 2,000 பேரும், குஜராத்தில் 1,223 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இந்தியாவில் 7,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் மருத்துவத்துறையில் மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. 7 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு.. பீதியில் மக்கள்..!
அனைத்து மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள், படுக்கைகள், போதுமானளவு ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறித்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா ஆர்டி பிசிஆர் சோதனை கட்டாயமாக்கியுள்ளனர். டெல்லி முதலமைச்சர், அந்த மாநில எம்பி, எம்எல்ஏக்கள் ஆகியோருடன் பாஜக நிர்வாகிகள் சுமார் 70 பேர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்தில் வைத்து சந்திக்க உள்ளனர்.
டெல்லி மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் இன்று இரவு தன் இல்லத்தில் சிறப்பு விருந்துக்கு அழைத்துள்ளார். இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று சொல்லி பரிசோதனை செய்துள்ளனர். மேலும் மோடியை சந்திக்கும் அனைத்து மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், பார்வையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வருபவர்கள் மட்டுமே பிரதமர் மோடியை சந்திக்க முடியும். பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் கொரோனா! கர்ப்பிணிகள் மாஸ்க் போட்டுக்கோங்க... பொது சுகாதாரத்துறை அறிவுரை!