ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.
விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே சிக்கல் கண்டறியப்பட்டதால் டெல்லியில் இருந்து பாரிஸ் செல்லும் விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் 241 பேர் மற்றும் தங்கும் விடுதியில் விழுந்ததால் ஏராளமானோர் உயிரிழந்தனர். எனவே ஏர் இந்தியா விமானத்தின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் விமானம் புறப்படுவதற்கு முன்பாகவும், விமானத்தில் உள்ள உபகரணங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் சரியாக உள்ளதா என ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மட்டும் இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஒரு எஞ்சின் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டதால் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட போது ரத்து செய்யப்பட்டது. ஒரு விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்பாகவே தொழில்நுட்பக்கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
இந்த நிலையில் மற்றொரு ஏர் இந்தியா விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், கட்டாய விமான பயணத்திற்கு முந்தைய சோதனையில் சிக்கல் கண்டுபிடிக்கப்பட்டதால் டெல்லியில் இருந்து பாரிசுக்கு செல்ல இருந்த AI143 விமானம் ரத்து செய்யப்படுவதால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாள பாரிஸில் இருந்து டெல்லிக்கு செல்லும் AI142 விமானமும் ரத்து செய்யப்படுவதாகவும் பயணிகள் தங்குவதற்கு இருப்பிடம் உள்ளிட்டவற்றை வழங்குவதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தாய்லாந்து பாடகரையும் காப்பாற்றிய 11A.. அதிகம் வெறுக்கப்பட்ட சீட் அதிர்ஷ்டமானதாக மாறியது எப்படி?